கம்பஹா – திவுலப்பிட்டியவில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு இலத்திரனியல் சிகரெட்டுகளை விற்பனை செய்து வந்த ஒரு பெண், திங்கட்கிழமை (15) கைது செய்யப்பட்டுள்ளார். திவுலப்பிட்டிய பொலிஸ் நிலைய ஊழல் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, திவுலப்பிட்டியவில் உள்ள ஒரு பாடசாலைக்கு அருகில் வைத்து இவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் 32 வயதுடைய வெயாங்கொடையைச் சேர்ந்தவர். ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, இவர் நீண்ட காலமாக மாணவர்களுக்கு இலத்திரனியல் சிகரெட்டுகளை விற்பனை செய்து வந்துள்ளார். ஒரு சிகரெட்டை ரூபா 5500 முதல் 7000 வரை இவர் விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வெளிநாட்டில் இருக்கும் இவரது கணவர் மூலமாக இந்த சிகரெட்டுகள் இவருக்கு கிடைத்துள்ளன. இந்த சம்பவம் குறித்து திவுலப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
A woman was arrested in the Divulapitiya area for selling electronic cigarettes to school students. The arrest was made based on a tip-off received by the Divulapitiya Police Anti-Corruption Unit. Preliminary investigations revealed that the 32-year-old woman, a resident of Veyangoda, had been selling the cigarettes for a long time, sourcing them from her husband who lives abroad. The police are conducting further investigations into the matter.