தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நடந்த ஒரு கோரமான விபத்து, இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த எட்டு பேரின் வாழ்க்கையைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு வேன், லொறி மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது.
இந்த விபத்தில் ஒரு இளம் பெண் உயிரிழந்ததுடன், மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர், 35 வயதுடைய புஷ்பகுமாரி சந்தமாலி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் ஒபாத்த, வீரதொட மல்துவ பகுதியைச் சேர்ந்த கேக் விற்பனையாளர்.
சந்தமாலியின் சகோதரர் இஸ்ரேலில் இருந்து நாடு திரும்ப இருந்த நிலையில், அவரை விமான நிலையத்தில் அழைத்து வருவதற்காக தவளமை பகுதியில் இருந்து கட்டுநாயக்கவுக்கு வேனில் சென்றபோதே இந்த துயரம் நிகழ்ந்துள்ளது. கலனிகமவுக்கும் கடதுடுவவுக்கும் இடைப்பட்ட 9.6 கி.மீ தூரத்தில் இந்த விபத்து நடந்தது. பல்பொருள் அங்காடிகளுக்கு பொருட்களை விநியோகித்துவிட்டு, கொழும்புக்குத் திரும்பிக்கொண்டிருந்த லொறியொன்றின் பின்புறத்தில் இந்த வேன் மோதியது.
விபத்து நடந்தபோது வேனை ஓட்டியவர் சந்தமாலியை திருமணம் செய்யவிருந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், வரும் டிசம்பர் மாதம் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர்.
சந்தமாலி வேனின் முன்பக்க இடது இருக்கையில் அமர்ந்திருந்தார். விபத்து நடந்ததும், உடனடியாக தீயணைப்புத் துறையினர் மற்றும் போக்குவரத்துப் பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, வேனுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்க உதவினர். அதேவேளை, அந்த வழியாகச் சென்ற வாகனங்களில் இருந்தவர்களும் காயமடைந்தவர்களை வெளியேற்றி, மூன்று குழந்தைகளை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்ப உதவினர்.
காயமடைந்தவர்கள் கஹதுடுவ, ஹோமாகம வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் மூன்று இளம் குழந்தைகள் மட்டும் மேலதிக சிகிச்சைக்காக களுபோவில போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். தற்போது, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த பெண்ணின் நிலைமை மோசமாக இருப்பதாகவும், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த குழந்தைகள் இஸ்ரேலில் இருந்து வந்த அந்த இளைஞரின் மனைவியின் குழந்தைகள் என தெரியவந்துள்ளது. விபத்துக்கு சாரதியின் அதிக வேகம் மற்றும் தூக்கமின்மையே காரணம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர். விபத்தில் வேன் பலத்த சேதமடைந்தாலும், லொறியின் பின்புறம் சிறிதளவு மட்டுமே சேதமடைந்துள்ளது.
A tragic road accident on the Southern Expressway involving a van and a lorry claimed the life of a young woman and injured six others, including three children. The deceased, Pushpakumari Sandamali, was on her way to pick up her brother from the airport with her fiancé, who was driving the van. The couple, who were engaged, were set to be married in December. Police suspect high speed and driver fatigue to be the causes of the accident.