வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையின்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று அடிக்கடி மழை பெய்யக்கூடும்.
அத்துடன், பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு நாட்டின் ஏனைய பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இந்த இடங்களில் சிலவற்றில், 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழை பெய்யும்போது தற்காலிகமாக பலத்த காற்றும், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால், அதனால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
The Department of Meteorology has forecast frequent rain for the Western, Sabaragamuwa, Central, North Western, and Northern provinces, as well as the Galle and Matara districts. Rain or thunderstorms are also expected in other parts of the country after 1 PM, with some areas possibly receiving moderate to heavy rainfall of over 50 mm. The public is advised to take precautions against potential risks from strong winds and lightning during these weather events.