Wednesday, September 17, 2025

ஒன்லைன் விளையாட்டால் தந்தையின் பணத்தை இழந்த சிறுவன் எடுத்த முடிவு!

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில், ஒரு 13 வயது சிறுவன் தனது தந்தையின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 14 லட்சத்தை ஆன்லைன் விளையாட்டில் இழந்ததால், தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஒரு பெயிண்டர், தனது நிலத்தை விற்று வங்கிக் கணக்கில் ரூ. 13 லட்சத்தைப் போட்டு வைத்திருந்தார். அந்தப் பணம் திடீரென மாயமானதைக் கண்ட அவர், வங்கி மேலாளரிடம் புகார் அளித்துள்ளார்.

வீட்டிற்கு வந்த அவர், பணம் காணாமல் போனது பற்றியும், வங்கியில் புகார் அளித்திருப்பது குறித்தும் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதைக் கேட்ட அவரது 13 வயது மகன், தனது அறையில் படிக்கப் போவதாகக் கூறிச் சென்றுள்ளார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, அவரது தங்கை அறைக்குச் சென்று பார்த்தபோது, சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளான். அவனை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த இளைஞன் தனது தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 14 லட்சத்தை ஆன்லைன் விளையாட்டிற்குப் பயன்படுத்தியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதே லக்னோவில், கடந்த மாதமும் 18 வயது இளைஞன் ஒருவன் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகி, படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் குடும்பத்திற்கு நிதிச் சுமையை ஏற்படுத்திவிட்டதாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் விளையாட்டுகளால் பல உயிர்கள் பறிபோய்க்கொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில், அதன் மீதான மோகம் மட்டும் குறைந்தபாடில்லை.

Hot this week

கொடூர மோசடி: 900 கோடியை சுருட்டிய நிதி நிறுவன உரிமையாளர்கள் கைது!

ஆயிரத்திற்கும் மேற்பட்ட வைப்பாளர்களிடமிருந்து 900 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்ததாகக்...

அஜித் மீது ‘Crush’.. ஆனால் ஏமாற்றப்பட்ட நடிகை: ஏன் இப்படி சொன்னார் AK!

நடிகர் அஜித் இன்று தமிழ் சினிமாவில் எவ்வளவு பெரிய உச்சத்தில் இருக்கிறார்...

யாழ் இளைஞனின் திடீர் துப்பாக்கிச் சூடு: கனடாவில் பரபரப்பு – காவல்துறை அதிரடி நடவடிக்கை!

கனடாவில், துப்பாக்கிச் சூடு நடத்திய ஒரு தமிழ் இளைஞனை பொலிஸார் தீவிரமாகத்...

பொது இடத்தில் பாலியல் தொல்லை: துயரம் தந்த ஒரு பயணம் – பொலிஸார் அதிரடி வேட்டை!

புத்தளத்தில் பேருந்தில் பயணித்த ஒரு யுவதியைத் தொடர்ந்து பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய...

குண்டாகிவிட்டீர்கள்’ – நடிகையிடம் பேசிய நபரால் ஏற்பட்ட மன உளைச்சல்!

தமிழில் '8 தோட்டாக்கள்' திரைப்படத்தின் வழியாக நடிகை அபர்ணா பாலமுரளி அறிமுகமானார். அதன்பிறகு...

Topics

கொடூர மோசடி: 900 கோடியை சுருட்டிய நிதி நிறுவன உரிமையாளர்கள் கைது!

ஆயிரத்திற்கும் மேற்பட்ட வைப்பாளர்களிடமிருந்து 900 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்ததாகக்...

அஜித் மீது ‘Crush’.. ஆனால் ஏமாற்றப்பட்ட நடிகை: ஏன் இப்படி சொன்னார் AK!

நடிகர் அஜித் இன்று தமிழ் சினிமாவில் எவ்வளவு பெரிய உச்சத்தில் இருக்கிறார்...

யாழ் இளைஞனின் திடீர் துப்பாக்கிச் சூடு: கனடாவில் பரபரப்பு – காவல்துறை அதிரடி நடவடிக்கை!

கனடாவில், துப்பாக்கிச் சூடு நடத்திய ஒரு தமிழ் இளைஞனை பொலிஸார் தீவிரமாகத்...

பொது இடத்தில் பாலியல் தொல்லை: துயரம் தந்த ஒரு பயணம் – பொலிஸார் அதிரடி வேட்டை!

புத்தளத்தில் பேருந்தில் பயணித்த ஒரு யுவதியைத் தொடர்ந்து பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய...

குண்டாகிவிட்டீர்கள்’ – நடிகையிடம் பேசிய நபரால் ஏற்பட்ட மன உளைச்சல்!

தமிழில் '8 தோட்டாக்கள்' திரைப்படத்தின் வழியாக நடிகை அபர்ணா பாலமுரளி அறிமுகமானார். அதன்பிறகு...

கனடாவில் பணவீக்க வீதம் குறித்த புதிய அறிவிப்பு!

கனடாவில் மொத்த பணவீக்க விகிதம் ஆகஸ்ட் மாதத்தில் 1.9% ஆக உயர்ந்துள்ளதாக...

நெடுந்தீவு மதுபானசாலையில் வாள்வெட்டு; இருவர் காயம்!

நெடுந்தீவில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி மதுபானசாலையில் நேற்று (16) இரவு...

இன்றைய வானிலை

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையின்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img