Wednesday, November 26, 2025

ஒன்லைன் விளையாட்டால் தந்தையின் பணத்தை இழந்த சிறுவன் எடுத்த முடிவு!

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில், ஒரு 13 வயது சிறுவன் தனது தந்தையின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 14 லட்சத்தை ஆன்லைன் விளையாட்டில் இழந்ததால், தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஒரு பெயிண்டர், தனது நிலத்தை விற்று வங்கிக் கணக்கில் ரூ. 13 லட்சத்தைப் போட்டு வைத்திருந்தார். அந்தப் பணம் திடீரென மாயமானதைக் கண்ட அவர், வங்கி மேலாளரிடம் புகார் அளித்துள்ளார்.

வீட்டிற்கு வந்த அவர், பணம் காணாமல் போனது பற்றியும், வங்கியில் புகார் அளித்திருப்பது குறித்தும் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதைக் கேட்ட அவரது 13 வயது மகன், தனது அறையில் படிக்கப் போவதாகக் கூறிச் சென்றுள்ளார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, அவரது தங்கை அறைக்குச் சென்று பார்த்தபோது, சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளான். அவனை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த இளைஞன் தனது தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 14 லட்சத்தை ஆன்லைன் விளையாட்டிற்குப் பயன்படுத்தியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதே லக்னோவில், கடந்த மாதமும் 18 வயது இளைஞன் ஒருவன் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகி, படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் குடும்பத்திற்கு நிதிச் சுமையை ஏற்படுத்திவிட்டதாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் விளையாட்டுகளால் பல உயிர்கள் பறிபோய்க்கொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில், அதன் மீதான மோகம் மட்டும் குறைந்தபாடில்லை.

Hot this week

வெளிநாட்டிலிருந்து வந்த இருவர் விமான நிலையத்தில் கைது

சுமார் 1 கோடி  78  இலட்சத்து 50ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய வெளிநாட்டுச்...

படகு கவிழ்ந்ததில் இளைஞன் பலி

பாலகுடா களப்பில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகக்...

மரம் நடும் நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றது; பசுமை நிலத்துக்கான முதற்கட்ட முயற்சி

வவுனியா சாஸ்திரி கூழாங்குளம் ஈஸ்வரன் விளையாட்டு கழக மைதானத்தில், நேற்றைய‌ தினம்...

காதலனின் வீட்டில் 8 பவுண் நகை திருடிய காதலி

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய பொலிஸ் நிலைய வீதியில் உள்ள காதலனின்...

தாழமுக்கமாக மாறும் குறைந்த அழுத்தம்

இலங்கைக்குத் தெற்காக நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசமானது அடுத்த 30 மணித்தியாலங்களில்...

Topics

வெளிநாட்டிலிருந்து வந்த இருவர் விமான நிலையத்தில் கைது

சுமார் 1 கோடி  78  இலட்சத்து 50ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய வெளிநாட்டுச்...

படகு கவிழ்ந்ததில் இளைஞன் பலி

பாலகுடா களப்பில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகக்...

மரம் நடும் நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றது; பசுமை நிலத்துக்கான முதற்கட்ட முயற்சி

வவுனியா சாஸ்திரி கூழாங்குளம் ஈஸ்வரன் விளையாட்டு கழக மைதானத்தில், நேற்றைய‌ தினம்...

காதலனின் வீட்டில் 8 பவுண் நகை திருடிய காதலி

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய பொலிஸ் நிலைய வீதியில் உள்ள காதலனின்...

தாழமுக்கமாக மாறும் குறைந்த அழுத்தம்

இலங்கைக்குத் தெற்காக நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசமானது அடுத்த 30 மணித்தியாலங்களில்...

பாசிக்குடா கடலில் நீராட சென்றவர் மாயம்

கல்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாசிக்குடா கடற்கரையில் நீராடச் சென்ற நபரொருவர் அலைகளில்...

ஜனாதிபதி அனுர குமாரவின் பிறந்த நாள் இன்று

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் 57 ஆவது பிறந்தநாள் இன்று (24)...

சரிகமப இறுதிச்சுற்று; இலங்கை இளைஞனுக்கு இரண்டாம் இடம்

இந்தியாவின் தமிழ்நாட்டின் முன்னணி இசைப் போட்டியான ஜீ தமிழ் ‘சரிகமப’ நிகழ்ச்சியின்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img