புத்தளத்தில் பேருந்தில் பயணித்த ஒரு யுவதியைத் தொடர்ந்து பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தேவாலயம் ஒன்றுக்குச் சென்றுகொண்டிருந்த 21 வயது மதிக்கத்தக்க அந்த யுவதியை, பல்வேறு வகையில் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய 45 வயது மதிக்கத்தக்க நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பேருந்தில் சென்ற அந்த யுவதியை பலமுறை சந்தேக நபர் அங்க சேட்டைகளுக்கு உட்படுத்தியுள்ளார். இதனால் அச்சமடைந்த யுவதி, வேறு பல பேருந்துகளுக்கு மாறிச் சென்றாலும், சந்தேக நபரின் தொந்தரவு தொடர்ந்ததால் கோபமடைந்து அவரைப் புகைப்படம் எடுத்துள்ளார். பின்னர், தன் சகோதரிக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்ததையடுத்து, குளியாப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
உடனடியாகச் செயல்பட்ட பொலிஸார், அந்தப் பகுதியால் வரும் பேருந்துக்காகக் காத்திருந்துள்ளனர். பொலிஸ் நிலையத்தை நெருங்கி வந்த அந்தப் பேருந்தை நிறுத்தி, சந்தேக நபரை கைது செய்துள்ளனர். மேலும், விசாரணையில் அந்தச் சந்தேக நபர் நீண்ட தூரப் பயணங்களில் செல்லும் பேருந்துகளில் இதுபோன்று மோசமான செயல்களில் தொடர்ந்து ஈடுபடுபவர் என்பது தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம், குருணாகலில் இருந்து நீர்கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த யுவதிக்கு நேர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
In Puttalam, a young woman traveling on a bus was continuously harassed by a man. The 21-year-old woman, who was heading to a church, was repeatedly subjected to sexual misconduct by the 45-year-old suspect. Despite changing buses, the harassment continued, prompting her to take a photo of the man and report the incident to the police. The police quickly intervened, stopping the bus near the station and arresting the suspect. Investigations revealed that the man was a habitual offender on long-distance buses.