துரைப்பாக்கம் சென்னையை அடுத்த கண்ணகி நகரை சேர்ந்தவர் நாகராஜன் (30 வயது)
இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 32 வயது இளைஞர் ஒருவரின் மனைவிக்கும் இடையே நீண்ட நாள் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. பின்னர் அது காதலாக மாறிய நிலையில், இருவரும் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.
அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துத் தங்களது விருப்பங்களை நிறைவேற்றி வந்திருக்கிறார்கள். இது அந்த இளைஞருக்குத் தெரியவந்த நிலையில், குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. அத்துடன் நாகராஜனுக்கும் அந்த இளைஞருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இந்த விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட சண்டையில் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தனது மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த நாகராஜனைத் தன் வீட்டில் வளர்த்து வந்த நாயை ஏவி கடிக்க வைத்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த நாகராஜன் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக கண்ணகி நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
A man in Chennai, India, was allegedly attacked and bitten by a dog after the dog’s owner found out he was having an affair with his wife. The injured man was admitted to the hospital, and police have registered a case and are investigating the incident.