நாவலப்பிட்டியிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி தீப்பற்றி எரிந்தது.
நாவலப்பிட்டியிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த ஓர் ஆட்டோ, திடீரெனத் தீப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆட்டோவில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அதை நிறுத்திவிட்டுச் சாரதி கீழே இறங்கி சரிபார்த்துக்கொண்டிருந்தபோதே இந்த விபத்து ஏற்பட்டதாகப் பொலிஸார் கூறுகின்றனர்.
ஆட்டோவில் தீப்பற்றியதைக் கண்ட உள்ளூர் மக்களும், பொலிஸாரும் இணைந்து தீயை அணைக்கப் பெருமளவில் முயற்சிகளை மேற்கொண்டனர். இருப்பினும், தீயின் வேகம் அதிகமாக இருந்ததால், அந்த முச்சக்கரவண்டி முழுவதுமாக எரிந்து நாசமாகிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தீ விபத்து ஏற்பட்டபோது, முச்சக்கர வண்டியில் சாரதியுடன் மேலும் ஒருவர் பயணித்துள்ளார். எனினும், அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
An autorickshaw traveling from Nawalapitiya to Hatton suddenly caught fire due to a technical issue. Although local residents and police tried to extinguish the fire, the vehicle was completely destroyed. Fortunately, no one was injured in the incident.