நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் காணப்படும் மழை மற்றும் காற்றுடன் கூடிய நிலைமைகள் தொடரும் என தற்போது வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில், மேல், சப்ரகமுவ, காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வடமேல் மாகாணத்தில் லேசான மழைக்கான வாய்ப்புள்ளது.
மேலும், ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்கு மேல் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், மத்திய, வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.
எனவே, இடி மின்னல் மற்றும் பலத்த காற்று காரணமாக ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
___________________________________________________________________
The Department of Meteorology has forecast a continuation of the rainy and windy conditions in the southwestern parts of the country. Intermittent rain is expected in the Western, Sabaragamuwa, Galle, Matara, Kandy, and Nuwara Eliya districts, with light rain possible in the Northwestern Province. Thundershowers are expected in the Uva province and in the Ampara and Batticaloa districts after 2 PM. Strong winds of 30-40 km/h are also forecast for several areas. The public is advised to take necessary precautions to mitigate risks from lightning and strong winds.