Tuesday, October 21, 2025

2026-இல் கல்வித் துறையை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம்; அரசாங்கம் அறிவிப்பு!

கல்வித் துறையை டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பான கொள்கைத் திட்ட வரைபை 2026ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமைச்சரவையில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பு.

பிரதமரும், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சருமான (கலாநிதி) ஹரினி அமரசூரிய தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கல்வி மறுசீரமைப்புக் குறித்த உபகுழுவிடம், கல்வி மறுசீரமைப்புக்கான டிஜிட்டல் செயலணியின் அதிகாரிகள் இந்தத் தகவலைத் தெரிவித்தனர்.

அப்போது, செயலணியால் தயாரிக்கப்பட்ட பணித் திட்டத்தை முன்வைத்த அதிகாரிகள், கல்வி மறுசீரமைப்பிற்காக மேற்கொள்ளப்படும் ஆறு பிரிவுகளில் இந்த டிஜிட்டல் மயமாக்கலை முன்னெடுப்பது குறித்துக் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டினர்.

இதன் மூலம், ஆசிரியர் பற்றாக்குறைக்குச் சாதகமான தீர்வு கிடைக்கும் என்று அவர்கள் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தனர். அத்துடன், கல்விக்கான தகவல் தொடர்பாடல் உபகரணங்கள் மற்றும் வளங்களை வழங்குதல், பேரிடர் சூழ்நிலைகளில் பாடசாலைகளைத் தொடர்ந்தும் இயங்கச் செய்தல், மாணவர்களுக்கான சிறுவர் பராயத்தை டிஜிட்டல் மயமாக்கலின் மூலம் பெற்றுக்கொடுத்தல் போன்ற துறைகளிலும் கவனம் செலுத்தப்பட்டு, இந்த டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறையை முன்னெடுக்க எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

2025 டிசம்பர் 31ஆம் திகதிக்குள், இணையத்தள வசதிகள் இல்லாத பாடசாலைகளுக்கு இணையத்தள வசதிகள், டிஜிட்டல் ஸ்மார்ட் போர்ட் மற்றும் கணினி அல்லது மடிக்கணினி இல்லாத பாடசாலைகளுக்கு அவற்றைப் பெற்றுக் கொடுக்கவும் செயலணி திட்டமிட்டுள்ளது.

தற்போதுள்ள தகவல்களின்படி, நாட்டில் உள்ள 3 இரண்டாம் நிலைப் பாடசாலைகளுக்கு மின்சார வசதி இல்லை என்றும், 546 பாடசாலைகளில் கணினி, மடிக்கணினி அல்லது டப் கருவி எதுவும் இல்லை என்றும், 2088 பாடசாலைகளில் டிஜிட்டல் ஸ்மார்ட் போர்ட்கள் இல்லை என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

இங்கு உரையாற்றிய பிரதமர், எதிர்காலத்துக்காக அதிக முதலீட்டில் மேற்கொள்ளப்படும் கல்வித் துறையின் இந்தக் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கு அனைவரின் ஆதரவும் அவசியம் என்று வலியுறுத்தினார். எனவே, கல்வி மறுசீரமைப்பு தொடர்பாகப் பொருத்தமான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்குமாறு அவர் டிஜிட்டல் செயலணியைக் கேட்டுக்கொண்டார்.

_______________________________________________________________

The Digital Task Force for Education Reform plans to submit its policy draft on the digital transformation of the education sector to the Cabinet by March 2026. This was announced during a meeting of the sub-committee on education reform, chaired by Prime Minister Dr. Harini Amarasuriya. The task force aims to address areas like the teacher shortage, disaster preparedness, and enhancing student learning through digitalization. They also plan to provide internet, digital smart boards, and computers/laptops to schools lacking these facilities by December 31, 2025, noting that many schools currently lack basic digital infrastructure and electricity. The Prime Minister called for full support and relevant suggestions for this significant change.

Hot this week

தமிழர் பகுதியில் இளம் குடும்பஸ்தருக்கு நடந்த பெரும் கொடூரம்; துயரில் கதறும் குடும்பம்

கிளிநொச்சி, அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் - ஈச்சங்குளம் பகுதியில் இளைஞர்...

Vacancy Preschool Teacher

🎨👩‍🏫 We Are Hiring – Preschool Teacher 👩‍🏫🎨 Join our...

Vacancy Available

🔰 பதவி வெற்றிடம் 🔰 🔖பிரபல நிறுவனமொன்றின் கிளைகளில் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கான...

21 மாணவர்கள் கைது; பல்கலைக்கழகத்திலிருந்து உடனடி வெளியேற்றம் அறிவிப்பு

ருஹுணு பல்கலைக்கழக விவசாய பீடத்தில் இரண்டு மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில்...

கைக்குட்டைகளை பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்ட பெண்கள் கைது!

கைக்குட்டைகளை விற்பனை செய்வதாகக் கூறி தங்க சங்கிலி மற்றும் பணப்பைகளைத் திருடிய...

Topics

தமிழர் பகுதியில் இளம் குடும்பஸ்தருக்கு நடந்த பெரும் கொடூரம்; துயரில் கதறும் குடும்பம்

கிளிநொச்சி, அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் - ஈச்சங்குளம் பகுதியில் இளைஞர்...

Vacancy Preschool Teacher

🎨👩‍🏫 We Are Hiring – Preschool Teacher 👩‍🏫🎨 Join our...

Vacancy Available

🔰 பதவி வெற்றிடம் 🔰 🔖பிரபல நிறுவனமொன்றின் கிளைகளில் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கான...

21 மாணவர்கள் கைது; பல்கலைக்கழகத்திலிருந்து உடனடி வெளியேற்றம் அறிவிப்பு

ருஹுணு பல்கலைக்கழக விவசாய பீடத்தில் இரண்டு மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில்...

கைக்குட்டைகளை பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்ட பெண்கள் கைது!

கைக்குட்டைகளை விற்பனை செய்வதாகக் கூறி தங்க சங்கிலி மற்றும் பணப்பைகளைத் திருடிய...

மதுபோதையால் ஏற்பட்ட துயரச் சம்பவம்!

சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள தங்கபுரம் பகுதியில் நேற்று (20) இரண்டு மோட்டார்...

பிரியாணிக்காக ஏற்பட்ட கொடூரம்; துடித்தபடி உயிரிழந்த நபர்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சைவ பிரியாணிக்கு பதில் தவறுதலாக அசைவ பிரியாணி கொடுத்த...

செயலிழந்த அரச இணைய சேவைகள் மீண்டும் வழமைக்கு வந்தன.

'இலங்கை அரச கிளவுட்' சேவையில் ஏற்பட்டிருந்த சிக்கல் நிலை தற்போது முழுமையாக...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img