நிறுவனத்தில் இருவருக்கு இடைஇயில் ஏற்பட்ட தகராறில் தாக்குதலில் படுகாயமடைந்து முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழப்பு.
வெலிக்கடை பொலிஸ் பிரிவின் அங்கொடை பகுதியில் நேற்று (26) மாலை இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் அங்கொடை பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் ஆவார். சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் அவரது அயல் வீட்டுக்காரர் எனவும், உயிரிழந்த பெண்ணும் சந்தேக நபரும் ஒரே நிறுவனத்தில் துப்புரவுப் பணியாளர்களாகப் பணியாற்றி வருவதாகவும் தெரியவந்துள்ளது.
தகராறு ஒன்றைத் தொடர்ந்து சந்தேக நபர், குறித்த பெண்ணை ஆயுதம் ஒன்றால் தாக்கியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அவரது உடல் முல்லேரியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வெலிக்கடைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
____________________________________________________________________
A 65-year-old woman from Angoda, who worked as a cleaner at the same company as the suspect, died after being severely assaulted during a dispute in the Angoda area yesterday evening (26th). The victim was admitted to Mulleriyawa Hospital but succumbed to her injuries. Initial investigations revealed that her neighbour, who is the suspect, attacked her with a weapon. The suspect has been arrested, and Welikada Police are conducting further investigations.