மதுரை சேர்ந்த 19 வயது இளைஞன், தனது 17 வயது காதலி வேறு வாலிபரிடம் பேசியதால் ஆத்திரம் அடைந்து கல்லால் அடித்துப் படுகொலை செய்த அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மதுரையில் உள்ள ஊமச்சிகுளம் அருகே சின்ன மாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசூர்யா (19 வயது). பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்த இவர், சிவகாசியைச் சேர்ந்த தனது தாய்மாமன் மகளான பிரதீபா (17 வயது) என்ற நர்சிங் கல்லூரி மாணவியைக் காதலித்து வந்துள்ளார். பிரதீபா அண்மைக் காலமாக கல்லூரிக்குச் செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, ஜெயசூர்யா வேலைக்குச் செல்லாமல் இருந்ததால், அவருடன் பேசுவதைப் பிரதீபா நிறுத்தியதாகத் தெரிகிறது. அத்துடன், அவர் வேறு ஒருவருடன் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜெயசூர்யா, பிரதீபாவுடன் தொலைபேசியில் வாக்குவாதம் செய்து திட்டியுள்ளார்.
இந்த நிலையில், வேறு யாருடனும் பேசுவதை நிறுத்திக்கொள்ளுமாறு பிரதீபாவை அவர் எச்சரித்துள்ளார். இதற்கு அவர் மறுத்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, நேற்று முன்தினம் அழகர்கோவிலுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி பிரதீபாவை ராஜாக்கூர் கண்மாய் கரைக்கு ஜெயசூர்யா அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு, வேறு யாருடனும் பேசக்கூடாது என்று பிரதீபாவிடம் அவர் பிரச்சினை செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜெயசூர்யா, கீழே கிடந்த கல்லால் பிரதீபாவை அடித்துப் படுகொலை செய்தார். சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, ஜெயசூர்யா ஒத்தக்கடை பொலிஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். பொலிஸார் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.
_______________________________________________________________
A shocking incident occurred in Madurai, India, where a 19-year-old youth named Jayasurya murdered his 17-year-old girlfriend, Prathiba, by violently hitting her with a stone. The two were in a relationship, but the youth became enraged after the student began to distance herself due to his unemployment and reportedly spoke to another person. Jayasurya lured her to Rajaakkoor Kanmai (tank) embankment under the pretext of taking her to Alagarkovil, where a heated argument ensued. After the murder, Jayasurya surrendered to the Othakadai Police, who have registered a case and arrested him.