2024 மே 29 அன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் வடமேல் மாகாண கணினி குற்றப்பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், வங்கிக் கணக்கு ஒன்றிலிருந்து 569,610 ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நால்வர் நேற்று (14) கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 30 மற்றும் 38 வயதுடையவர்கள். அவர்கள் முறையே தெஹிதெனிய மற்றும் முருதலாவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இவர்கள், இணையதளத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஒரு நீர் மோட்டாரை வாங்குவதாகக் கூறி, அதற்காக முன்பணம் செலுத்துவதாகப் பொய்யுரைத்து, விற்பனையாளரின் வங்கிக் கணக்கின் OTP இலக்கத்தைப் பெற்று, 569,610 ரூபாயை மோசடி செய்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பண மோசடி, தவறான பயன்பாடு மற்றும் நம்பிக்கைக்குப் புறம்பாக நடந்துகொள்ளல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் ஒருவரும், அவருக்கு உதவிய மேலும் மூவரும் என மொத்தம் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (15) வாரியபொல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் வடமேல் மாகாண கணினி குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
Four individuals, aged 30 and 38 and hailing from Dehideniya and Muruthalawa, were arrested yesterday (the 14th) by the North Western Province Computer Crime Division of the CID regarding a complaint received on May 29, 2024, about the fraudulent transfer of Rs. 569,610 from a bank account. Investigations revealed that the suspects allegedly promised to buy a water motor advertised online, obtained the seller’s bank account OTP (One-Time Password) under the guise of paying an advance, and then illegally withdrew the money; the suspects will be produced before the Wariyapola Magistrate’s Court today (the 15th).