கிளிநொச்சி – பரந்தன் பகுதியிலிருந்து முரசுமோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த உழவியந்திரமும் எதிர்த்திசையில் வந்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று இரவு 9.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பரந்தன் பகுதியிலிருந்து முரசுமோட்டை நோக்கி அரி கல் (மணல் கல்) ஏற்றிய நிலையில் சென்றுகொண்டிருந்த உழவியந்திரமும் (டிராக்டர்), எதிர்த் திசையில் வந்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து நிகழ்ந்தது.
உழவியந்திரத்துடன் மோதிய டிப்பர் வாகனம், வீதியில் குறுக்காகத் தடம் புரண்டுள்ளது.
இந்த விபத்தில் உழவியந்திரத்தில் பயணித்த பெண் உட்பட மூன்று பேர் காயங்களுக்குள்ளான நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டிப்பர் சாரதி சிறு காயங்களுடன் தப்பினார்.
விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
A three-member tractor crew, including a woman, were injured and hospitalized after their tractor, which was carrying quarry dust, collided head-on with a tipper truck travelling in the opposite direction on the Paranthan to Murusumottai road in Kilinochchi at 9:00 PM last night. The impact caused the tipper truck to overturn across the road, and the tipper driver sustained minor injuries; Kilinochchi Police are investigating the accident.