சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள தங்கபுரம் பகுதியில் நேற்று (20) இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உட்பட ஐவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிள் மீது, அதே பகுதியில் பயணித்த மற்றுமொரு மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
சந்தேகத்தில் பொலிஸார்
இந்த விபத்தில், தங்கநகரைச் சேர்ந்த 38, 18, 09 வயதுகளைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்துள்ளனர். அத்தோடு, மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்த 35, 48 வயதுகளைச் சேர்ந்த இருவர் என மொத்தம் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் மூவர் அவசர நோயாளர் காவு வண்டி மூலமும், இருவர் முச்சக்கர வண்டியிலும் மூதூர் தள வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்து உடைவடைந்த நிலையில் மதுபானப் போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த நபர்கள் மது அருந்தியிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Five people, including three members of the same family, were seriously injured yesterday (the 20th) in the Thangapuram area of Sampoor Police Division when two motorcycles collided head-on. The injured, aged 38, 18, and 9 from one family, and 35 and 48 from the other motorcycle, were taken to the Muttur Base Hospital. Police recovered broken liquor bottles at the accident site and suspect that the individuals may have been driving under the influence of alcohol; Sampoor Police are conducting further investigations.