டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நேற்றைய தினம் (10) மாலை இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பில் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில், குண்டு வெடிப்பில் 6 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்துள்ளதுடன், அருகே நிறுத்தப்பட்டிருந்த சில வாகனங்களும் சேதமடைந்தன.
வெடிப்புச் சம்பவம் நடந்த காரிலும் சில பயணிகள் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், குண்டு வெடிப்புக்கான காரணம் இன்னும் வெளியிடப்படாத நிலையில், கார் எங்கிருந்து வந்தது? அதன் உரிமையாளர் யார்? போன்ற முக்கிய விவரங்களைக் கண்டறியும் முயற்சியில் புலனாய்வு அதிகாரிகள் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

விசாரணை தீவிரம்
இந்தச் சம்பவ இடத்திற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்தார். அத்துடன், காயமடைந்து லோக்நாயக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் அவர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர், ஊடகங்களுக்கு அவர் கருத்துத் தெரிவிக்கும்போது, “என்எஸ்ஜி (NSG) மற்றும் என்ஐஏ (NIA) குழுக்கள், உள்துறை அமைச்சகத்தின் தடயவியல் குழுவினருடன் (FSL) இணைந்து, தற்போது முழுமையான விசாரணையைத் தொடங்கியுள்ளன. அருகில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்கள் மற்றும் பிற உபகரணங்களையும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லி காவல் ஆணையர் மற்றும் சிறப்புப் பிரிவின் பொறுப்பாளரிடம் பேசினேன்; அவர்கள் சம்பவ இடத்திலேயே உள்ளனர். அனைத்து சாத்தியக் கூறுகளையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம், மேலும் அனைத்து சாத்தியக்கூறுகளையும் மனதில் கொண்டு முழுமையான விசாரணை நடத்தப்படும்” என்று கூறினார்.

கார் குண்டு வெடிப்புச் சம்பவத்தால் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு நில அதிர்வு உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது. குண்டு வெடிப்பின் உக்கிரம் காரணமாக அருகில் உள்ள கட்டடங்களின் கண்ணாடிகள் கூட வெடித்துச் சிதறியுள்ளன.
இந்த விவகாரத்தில், டெல்லியில் கார் குண்டு வெடிப்பு நடந்த இடத்தை முழுமையாகச் சீல் வைத்து, காவல் துறை, என்.ஐ.ஏ., மற்றும் தேசியப் பாதுகாப்புப் படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பல்வேறு கோணங்களில் விசாரணை துரிதமாக நடைபெற்று வருகிறது.
கார் சாரதி அடையாளம்
டெல்லியில் கார் குண்டு வெடித்தபோது காரை ஓட்டி வந்தவரின் அடையாளம் தெரிய வந்துள்ளது. மேலும், குண்டு வெடிப்பதற்கு அரை மணிநேரம் முன்னதாக அந்தக் கார் ஒரு சுங்கச் சாவடியைக் கடந்து சென்றது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. காரை ஓட்டி வந்தவரின் புகைப்படத்தை டெல்லி காவல்துறையினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.
உமர் என்று அறியப்படும் அந்த நபர் காரைப் பதர்ப்பூர் எல்லை வழியாக டெல்லிக்குக் கொண்டு வந்ததாகவும், நேற்று மாலை 3 மணி நேரம் செங்கோட்டை அருகே உள்ள பூங்காவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், அதன்பின் மாலை 6.30 மணியளவில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த சிக்னல் அருகே கொண்டு வரப்பட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் டெல்லி காவல்துறையினர் தாரிக், உமர், மற்றும் அமீர் ஆகிய மூன்று பேரைக் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
A car bomb explosion near the Delhi Red Fort Metro Station yesterday evening (10) resulted in the deaths of 10 people, with six vehicles catching fire and several others being damaged. Intelligence officials are intensively investigating the source and ownership of the car. Union Home Minister Amit Shah visited the site and the injured, stating that NSG, NIA, and FSL teams have launched a comprehensive investigation, examining all CCTV footage. Police have identified the driver of the car as a person named Umar, who brought the vehicle into Delhi via the Badarpur border and parked it near Red Fort before the 6:30 PM explosion. The Delhi Police have arrested three individuals—Tariq, Umar, and Amir—in connection with the incident, which caused an explosion felt up to 3 km away.



