மிதிகம பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் உட்பட ஏழு பேரை கொலை செய்யத் திட்டமிட்டுக் கொண்டிருந்த போது தப்பியோடிய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெலிகமப் பொலிஸார் நேற்றைய தினம் (23) குறித்த சந்தேகநபரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
மிதிகமப் பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் உட்பட ஏழு பேரைக் கொலை செய்வதற்காக வருகை தந்த துப்பாக்கிதாரிகளுக்குத் தங்குமிட வசதிகளை இந்த நபரே வழங்கியுள்ளார் என்பது விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தகர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களைக் கொலை செய்யச் சதித்திட்டம் தீட்டிக்கொண்டிருந்த வேளையில் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரோஹான் ஒலுகல அவர்களின் தலைமையிலான அதிகாரிகள் குழு அண்மையில் மிதிகமவில் உள்ள ஓர் வீட்டைச் சோதனையிட்டது.
அச்சமயத்தில், T-56 ரக துப்பாக்கியுடன் முன்னாள் இராணுவச் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
அந்தச் சந்தர்ப்பத்தில், மேலும் இரண்டு சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதன்படி மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் விளைவாக, குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில், குறித்த வீட்டின் உரிமையாளர் வெலிகம, இப்பாவல பகுதியில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மிதிகமப் பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடையவர் எனவும், அவரை மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தி தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
A suspect who allegedly provided accommodation to gunmen planning to murder a businessman and six others in the Midigama area has been arrested by Weligama Police yesterday (23). The arrest follows a recent raid where one suspect, a former soldier with a T-56 rifle, was caught, but two others escaped. The arrested individual, the 38-year-old owner of the house used as a hideout, is scheduled to be produced before the Matara Magistrate’s Court to obtain a detention order.



