யாழ்ப்பாணம் – திருநெல்வேலியில் இளைஞரொருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான ஆறு பேருக்கும் டிசம்பர் 15 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று (03) முற்படுத்தப்பட்ட போதே குறித்த உத்தரவை மேலதிக நீதிவான் பிறப்பித்துள்ளார்.
விசாரணையின் போது, கொலைச் சம்பவம் நடைபெற்ற நேரத்தில் தாக்குதலாளிகளைக் காப்பாற்றும் வகையில் சந்தேக நபர்களைப் பின் தொடர்ந்து பயணித்த கார் ஒன்றும் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் ஏழாலைப் பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டது.

தடுப்புக் காவல் விசாரணை முடிவுற்ற நிலையில், கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களும் மீண்டும் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போதே குறித்த உத்தரவை மேலதிக நீதிவான் பிறப்பித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலிச் சந்திக்கு அருகில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக ஆறு பேர் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
The remand period for the six individuals arrested in connection with the fatal hacking of a youth near Thirunelveli junction in Jaffna last Sunday has been extended until December 15th by the Jaffna Additional Magistrate’s Court, following their appearance in court yesterday (03rd). During the investigation, a car that had reportedly followed the attackers to assist in their escape was also seized by the Jaffna District Crime Prevention Division Police in the Elalai area.


