பொரளை சிறிசர உயன விளையாட்டு மைதானத்தில் கடந்த 7ஆம் திகதி இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடவத்தை பகுதியில் உள்ள விடுதியொன்றில் மறைந்திருந்த போது கொழும்பு மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர், பொரளை சிறிசர உயன விளையாட்டு மைதானத்தில் ஐந்து இளைஞர்களை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.