கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டை அருகே உள்ள கிராமத்தில் 14 வயது சிறுமி ஒருவர் பள்ளிக்கு சென்ற சிறுமி மாலை வெகு நேரமாகியும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சிறுமியை பல இடங்களில் தேடிப் பார்த்தனர். எங்கு தேடியும் அவள் கிடைக்கவில்லை. இதுபற்றி சிறுமியின் பெற்றோர் பொலிஸில் புகார் அளித்தனர். அப்போது ஒசக்கோட்டை பொலிஸில் இருந்து சிறுமியின் பெற்றோருக்கு அழைப்பு வந்தது.

விபத்தில் சிக்கி பலி
இதன் போது பொலிஸார் விபத்தில் சிக்கி உங்கள் மகள் இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் கதறி அழுதனர். மேலும் தங்கள் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக அவளது பெற்றோர் ஒசக்கோட்டை பொலிஸாரிடம் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் பொலிஸார் விசாரணையைத் தொடங்கினார்கள்.
இந்த நிலையில் நடத்திய விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ய கடத்திச் சென்றபோது மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி, அவள் பலியானது தெரியவந்தது.
இதுதொடர்பாக ஒசக்கோட்டை பொலிஸார் விசாரணை நடத்தி சிறுமியை கடத்திச் சென்றதாக 4 வாலிபர்களைக் கைது செய்துள்ளனர்.
விசாரணையில், அவர்கள் ஒசக்கோட்டையைச் சேர்ந்த அஜய் என்ற சிறுவன் உள்ளிட்ட குழு என்பது தெரியவந்தது. குறித்த சிறுமி பேருந்துக்காகக் காத்திருந்தபோது அஜய் தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிள்களில் அங்கு வந்துள்ளார். அப்போது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்வதற்காக பஸ் நிறுத்தத்தில் இருந்து அவளைக் கடத்திச் சென்றுள்ளனர்.
சிறுமி அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றதால், ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த சிறுமி உயிரிழந்துள்ளார். ஏனையவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
In a shocking incident near Hoskote, Bengaluru Rural district, Karnataka, India, a 14-year-old schoolgirl who did not return home was found to have died in a road accident. Following a complaint filed by her parents, who suspected foul play, police launched an investigation. The investigation revealed that the girl was kidnapped from a bus stop for the purpose of sexual assault by a group of four youths, including one named Ajay, who were traveling on motorcycles. When the girl tried to escape, the motorcycle they were traveling on crashed, resulting in her death due to severe injuries. The other occupants of the motorcycle were also seriously injured. Hoskote Police have arrested the four youths involved in the kidnapping and death.


