பரந்தன் புதுக்குடியிருப்பு ஊடான முல்லைத்தீவு A35 வீதி இரண்டாக பிளவுபட்டிருப்பதால் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளதனை சீர் செய்யும் பணி இரவு பகலாக இடம்பெற்று வருகின்றது.
அண்மைய நாட்களாகப் பெய்த கனமழையால் நீர்மட்டம் உயர்வடைந்தமையால், பரந்தன் புதுக்குடியிருப்பு ஊடான முல்லைத்தீவு A35 வீதியில் உள்ள வட்டுவாகல் பாலம் இரண்டு துண்டுகளாகப் பிளவடைந்து, அதன் வழியாக வெள்ள நீர் பாய்கின்றது. இதனால் குறித்த வீதியுடனான போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளது.

எனவே, தேவையின் நிமித்தம் முல்லைத்தீவுக்குப் பயணம் செய்வோர் புதுக்குடியிருப்பு – கேப்பாபிலவு வழியான மாற்றுப் பாதையைப் பயன்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வட்டுவாகல் பாலமூடான போக்குவரத்து பெரும்பாலும் நாளை மாலை முதல் வழமைக்குத் திரும்புவதற்கான வாய்ப்புள்ளது.
அதற்காகச் சீரமைப்பு வேலைத்திட்டம் இரவு பகலாகத் தீவிரமாக இடம்பெற்று வருகின்றது.
The A35 road from Paranthan to Mullaitivu via Puthukkudiyiruppu is completely blocked after the heavy rains caused the Vattuvaikal bridge to split into two pieces due to high water levels. Emergency repair work is being carried out around the clock, and the Disaster Management Centre, which previously advised travelers to use the alternative Puthukkudiyiruppu-Keppapilavu route, anticipates that traffic through the Vattuvaikal bridge will mostly return to normal starting tomorrow evening.



