மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (10) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், முல்லைத்தீவு மாவட்டத்திலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும்போது பலத்த காற்றும், மின்னல் தாக்கங்களும் ஏற்பட வாய்ப்புள்ளதால், அதனால் ஏற்படும் அபாயங்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
______________________________________________________________________
The Department of Meteorology has forecast rain for several provinces in Sri Lanka, including Western, Sabaragamuwa, and North Western, as well as the Galle, Matara, Kandy, and Nuwara Eliya districts. Additionally, rain or thunderstorms are expected in the Eastern and Uva provinces and Mullaitivu district after 1:00 PM. Some areas may receive moderate to heavy rainfall of over 50 mm. The public is advised to take precautions against strong winds and lightning during thunderstorms.