இந்தியாவில் குடும்பப் பிரச்சினைகள் காரணமாக ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு சிறு குழந்தைகளைக் கொன்றுவிட்டு தானும் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தும்கா மாவட்டத்திலுள்ள பர்தாகி கிராமத்தைச் சேர்ந்த 30 வயதான ஒரு குடும்பஸ்தர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது வீட்டிற்கு அருகிலுள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டார். இதனையடுத்து, அவர் வீட்டுக்குச் சென்று பொலிஸார் ஆய்வு செய்தபோது, அவருடைய மனைவி, ஒரு மகள் மற்றும் ஒரு மகன் ஆகிய மூவரும் இறந்த நிலையில் கிடந்தனர்.
பொலிஸார் நடத்திய ஆரம்பக்கட்ட விசாரணைகளில், இந்தக் குடும்பத்தின் மகள் நீண்ட காலமாகத் தீராத நோயால் அவதிப்பட்டு வந்ததும், சிகிச்சைக்காக அடிக்கடி பணம் தேவைப்பட்டதால் குடும்பம் பெரும் கடனில் சிக்கியிருந்ததும் தெரியவந்துள்ளது.
இதனால் கணவன்–மனைவிக்கு இடையே தொடர்ந்து மனவருத்தங்கள் நிலவி வந்த நிலையில், கடந்த ஏழு மாதங்களாக அந்த மனைவி தனது குழந்தைகளுடன் தாயார் வீட்டிலேயே தங்கியிருந்துள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் கணவரின் வீட்டிற்குத் திரும்பி வந்த பின்னரும் இருவருக்கும் இடையில் மீண்டும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகப் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த வாக்குவாதத்தின் காரணமாக, கணவன் முதலில் தனது மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொன்றார். அதன் பின்னர், அதே முறையில் இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டு, வீட்டை விட்டு வெளியே சென்று மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்துப் பொலிஸார் தொடர்ந்து விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
A shocking incident occurred in the Bardahi village of Dumka district, India, where a 30-year-old man murdered his wife and two young children before taking his own life by hanging himself on a tree near his house. Initial police investigations suggest that severe financial troubles due to the daughter’s chronic illness led to continuous conflict, culminating in the man first strangling his wife and children after she returned home following a seven-month separation, and then committing suicide. Police are continuing their investigation into the family tragedy.


