சென்னையைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர், ‘கூகுள் மேப்’ வழிகாட்டுதலின்படி, காரில் கடலூர் வழியாகப் பயணித்துள்ளனர்.
கடலூர் சொத்திக்குப்பம் பகுதிக்கு அருகே வந்தபோது, மதுபோதையில் இருந்த அவர்கள், கடற்கரை மணலில் காரை இறக்கி வேகமாக ஓட்டியுள்ளனர். திடீரென கார் கடலுக்குள் சென்றது. சிறிது தூரம் சென்ற பின் கார் அலைகளுக்கு இடையே நின்றுவிட்டது.
மதுபோதையில் கடலில் தத்தளித்த அந்த ஐந்து பேரையும், அந்தப் பகுதியில் இருந்த மீனவர்கள் பத்திரமாக மீட்டனர். பின்னர், பொலிஸாரின் உதவியுடன் டிராக்டர் மூலம் கடலுக்குள் சென்ற கார் கயிறு கட்டப்பட்டு இழுத்து மீட்கப்பட்டது.
மதுபோதையில் இருந்தவர்கள், ‘கூகுள் மேப்’ வழிகாட்டுதலைப் பின்பற்றி காரை கடலுக்குள் ஓட்டிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
_____________________________________________________________________
Five people from Chennai, including two women, who were under the influence of alcohol, drove their car into the sea in Cuddalore after following Google Maps’ guidance. The car got stuck in the water, and the five individuals were rescued by local fishermen. With the help of the police, the car was later pulled out of the sea using a tractor. The incident has caused a stir in the area.