அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளில் இதுவரை 25 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ள தகவல்படி, இந்த அபராதத் தொகை ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் செப்டம்பர் 30 ஆம் திகதி வரையான 6 மாத காலப்பகுதியில் நடத்தப்பட்ட சோதனைகளில் இருந்து வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குறித்த காலப்பகுதியில் நாடு முழுவதும் 306 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்ட நிலையில், அவற்றில் பெரும்பாலானவை கொழும்பு மாவட்டத்தை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, எதிர்காலத்திலும் இந்தச் சுற்றிவளைப்புகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
The Consumer Affairs Authority (CAA) announced that it has collected over 25 million rupees in fines through legal actions taken against traders for selling bottled drinking water at excessive prices. This penalty amount was collected during 306 raids conducted across the country between April 1st and September 30th, with the majority of the operations centered in the Colombo District, and the CAA has stated that these raids will continue in the future.