Monday, November 24, 2025

கனடாவில் வீட்டு விற்பனை அதிகரிப்பு!

கனடாவில் வீட்டு விற்பனையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஆகஸ்ட் மாதத்தில், கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீட்டு விற்பனை அதிகரித்துள்ளதாக கனேடிய வீட்டு மனை ஒன்றியம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் நாடு முழுவதும் 40,257 வீடுகள் விற்பனையாகியுள்ளன. இது 2024 ஆகஸ்ட் மாதத்தில் விற்பனையான 39,522 வீடுகளை விட 1.9% அதிகம். அத்துடன், மாதந்தோறும் விற்பனை 1.1% அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்திலிருந்து மொத்தமாக 12.5% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம், தொடர்ச்சியாக ஐந்தாவது மாதமாக வீட்டு விற்பனை அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

“பொதுவாக ஒக்டோபர் காலத்தில் புதிய வீடுகள் சந்தைக்கு வரும். அத்துடன், இந்த வாரம் கனடா வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்தால், வீடுகளை வாங்க நினைப்பவர்களின் ஆர்வம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வீட்டுப் பட்டியல்கள் மாதந்தோறும் 2.6% உயர்ந்துள்ளன. ஆகஸ்ட் இறுதி நிலவரப்படி, நாடு முழுவதும் விற்பனைக்கு இருந்த வீடுகளின் எண்ணிக்கை 1,95,453 எனப் பதிவாகியுள்ளது.

இது கடந்த ஆண்டை விட 8.8% அதிகமாகும். 2025 ஆகஸ்ட் மாதத்தில் விற்கப்பட்ட வீடுகளின் சராசரி விலை 664,078 டொலர்களாக இருந்தது, இது கடந்த ஆண்டைவிட 1.8% அதிகமாகும்.

______________________________________________________________________

According to the Canadian Real Estate Association, home sales in Canada have risen to a four-year high in August 2025. The number of homes sold nationwide increased by 1.9% compared to August 2024, reaching 40,257 units. This marks the fifth consecutive month of sales growth. The average price of homes sold in August was $664,078, a 1.8% increase from the previous year. It is expected that sales may increase further if the Bank of Canada lowers its interest rate.

Hot this week

பாசிக்குடா கடலில் நீராட சென்றவர் மாயம்

கல்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாசிக்குடா கடற்கரையில் நீராடச் சென்ற நபரொருவர் அலைகளில்...

ஜனாதிபதி அனுர குமாரவின் பிறந்த நாள் இன்று

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் 57 ஆவது பிறந்தநாள் இன்று (24)...

சரிகமப இறுதிச்சுற்று; இலங்கை இளைஞனுக்கு இரண்டாம் இடம்

இந்தியாவின் தமிழ்நாட்டின் முன்னணி இசைப் போட்டியான ஜீ தமிழ் ‘சரிகமப’ நிகழ்ச்சியின்...

குடும்பத்தை அழித்து தந்தை தற்கொலை

இந்தியாவில் குடும்பப் பிரச்சினைகள் காரணமாக ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு...

யாழ் பருத்தித்துறை வைத்தியசாலையில் இரவு களவரம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குள் கத்தியுடன் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர்...

Topics

பாசிக்குடா கடலில் நீராட சென்றவர் மாயம்

கல்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாசிக்குடா கடற்கரையில் நீராடச் சென்ற நபரொருவர் அலைகளில்...

ஜனாதிபதி அனுர குமாரவின் பிறந்த நாள் இன்று

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் 57 ஆவது பிறந்தநாள் இன்று (24)...

சரிகமப இறுதிச்சுற்று; இலங்கை இளைஞனுக்கு இரண்டாம் இடம்

இந்தியாவின் தமிழ்நாட்டின் முன்னணி இசைப் போட்டியான ஜீ தமிழ் ‘சரிகமப’ நிகழ்ச்சியின்...

குடும்பத்தை அழித்து தந்தை தற்கொலை

இந்தியாவில் குடும்பப் பிரச்சினைகள் காரணமாக ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு...

யாழ் பருத்தித்துறை வைத்தியசாலையில் இரவு களவரம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குள் கத்தியுடன் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர்...

மிதிகம வர்த்தகர் உட்பட 7 பேரைக் கொல்ல திட்டமிட்டவர் கைது

மிதிகம பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் உட்பட ஏழு பேரை கொலை செய்யத்...

பேருந்துகளில் வங்கி அட்டை கட்டணம் இன்று முதல் ஆரம்பம்

பயணிகள் பேருந்துகளில் பயணிக்கும் போது பயணச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு வங்கி அட்டைகள்...

முச்சக்கர வண்டி மீது மரம் விழுந்து ஒருவர் பலி

மாவனெல்லை - ரம்புக்கனை வீதியின் தலகொல்ல பகுதியில் நேற்று (23) இடம்பெற்ற...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img