சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கையாக, 2029 முதல் ஐக்கிய இராச்சியத்தில் பணிபுரிய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட டிஜிட்டல் ஐடியை வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிமுகப்படுத்தியுள்ள இந்த டிஜிட்டல் அடையாள அட்டை முறை, சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்குள் நுழைந்து வேலை செய்வதைக் கடினமாக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இந்தத் திட்டம் மக்களுக்குப் பல சிறப்புச் சலுகைகளையும் வழங்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இருப்பினும், டிஜிட்டல் அடையாள அட்டைகளால் சட்டவிரோத குடியேறிகளின் வருகையைத் தடுக்க முடியாது என்று எதிர்க்கட்சி விமர்சித்துள்ளது.

இந்த நிலையில், பிரதமரின் இந்த டிஜிட்டல் அடையாள அட்டை முறை அறிவிப்புக்கு எதிராக 1.6 மில்லியனுக்கும் அதிகமான கையெழுத்துகளுடன் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டைக்கு பதிவு செய்ய யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. அந்நாட்டின் பாரம்பரியத்தின்படி, ஒரு மனுவில் 100,000 க்கும் மேற்பட்ட கையொப்பங்கள் பெறப்பட்டால், அது நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
________________________________________________________________________
The UK government has mandated that all individuals working in the country must possess a state-issued digital ID starting from 2029, as a measure to combat illegal immigration. Prime Minister Keir Starmer believes this system will make it harder for illegal migrants to work and will offer special benefits to citizens, though the Opposition has dismissed its effectiveness against illegal arrivals. In response to the announcement, a petition opposing mandatory registration for the government ID has gathered over 1.6 million signatures, which guarantees a debate in Parliament.


