Friday, October 24, 2025

யாழ்ப்பாணம்; சட்டவிரோத ஜோதிட நிலையத்தில் மூன்று இந்தியர்கள் கைது!

யாழ்ப்பாணத்தில் சுற்றுலா வீசா மூலம் இலங்கை வந்த இந்தியர்கள், சட்டவிரோதமாக ஜோதிட நிலையம் அமைத்து இயக்கி வந்த நிலையில் இன்று மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தின் பருத்தித்துறை – தும்பளை வீதிப் பகுதியில் சுற்றுலா வீசா மூலம் இலங்கைக்கு வந்த மூன்று இந்தியர்கள், சட்டவிரோதமான முறையில் ஜோதிட நிலையம் அமைத்து இயக்கி வந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தப் சட்டவிரோத ஜோதிட நிலையம் இயங்கி வருவது குறித்து தும்பளை கிராம அலுவலர், பருத்தித்துறை நகரசபைத் தவிசாளரின் கவனத்திற்குக் கொண்டு சென்றார். இதன் விளைவாக, நகரசபைத் தவிசாளர் நேற்று நேரில் சென்று நிலைமையை அவதானித்ததுடன், குறித்த இந்தியர்களை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

ஆனாலும், அவர்களின் அறிவுறுத்தலையும் மீறி ஜோதிட நிலையம் தொடர்ந்து இயங்கி வந்ததை அடுத்து, நகர பிதா வின்சன் டீ டக்ளஸ் போல், பருத்தித்துறைப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார், அந்த இந்தியப் பிரஜைகளின் கடவுச்சீட்டுகளைப் பரிசோதனை செய்தனர். அப்போது, அவர்கள் சுற்றுலா வீசாவில் நாட்டுக்குள் வந்திருப்பது உறுதியானது.

இதனையடுத்து, சட்டவிரோதமான முறையில் ஜோதிட நிலையம் அமைத்து இயக்கி வந்த அந்த மூன்று இந்தியப் பிரஜைகளையும் பொலிஸார் கைது செய்து, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


 

Three Indian nationals, who entered Sri Lanka on tourist visas, have been arrested in Jaffna’s Point Pedro for illegally operating an astrology center on Thumpalai Road. The arrest followed an investigation initiated by the Chairman of the Point Pedro Urban Council, Vincent T. Douglas Paul, after the individuals ignored warnings to cease their unauthorized operation, confirming they were violating their visa conditions by engaging in business activity.

Hot this week

இலங்கையில் வாகன இறக்குமதி; மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட தகவல்

இலங்கையில் வாகன இறக்குமதிகள், 2026 ஆம் ஆண்டில் சாதாரண நிலைக்குத் திரும்பும்...

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் குறைவு

இலங்கையில் தங்கத்தின் விலையில் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த...

வைத்தியசாலையில் பெரும் அடாவடித்தனம்; தனிநபர் காரணமாக மருத்துவ சேவைகள் நிறுத்தம்

காயமடைந்த ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஒருவர் வைத்தியசாலை ஊழியர்களை அச்சுறுத்திய...

தமிழர் பகுதியில் நடந்த கோர விபத்தில் பலர் படுகாயம்

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகனேரி சந்தியில் நேற்றைய தினம்...

2 தேங்காய் திருட்டுக்காக நடந்த கொலை; 24 ஆண்டுகள் கழித்து குற்றவாளிக்கு மரண தண்டனை

இரண்டு தேங்காய்களைத் திருடியதற்காக ஒருவரை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த...

Topics

இலங்கையில் வாகன இறக்குமதி; மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட தகவல்

இலங்கையில் வாகன இறக்குமதிகள், 2026 ஆம் ஆண்டில் சாதாரண நிலைக்குத் திரும்பும்...

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் குறைவு

இலங்கையில் தங்கத்தின் விலையில் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த...

வைத்தியசாலையில் பெரும் அடாவடித்தனம்; தனிநபர் காரணமாக மருத்துவ சேவைகள் நிறுத்தம்

காயமடைந்த ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஒருவர் வைத்தியசாலை ஊழியர்களை அச்சுறுத்திய...

தமிழர் பகுதியில் நடந்த கோர விபத்தில் பலர் படுகாயம்

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகனேரி சந்தியில் நேற்றைய தினம்...

2 தேங்காய் திருட்டுக்காக நடந்த கொலை; 24 ஆண்டுகள் கழித்து குற்றவாளிக்கு மரண தண்டனை

இரண்டு தேங்காய்களைத் திருடியதற்காக ஒருவரை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த...

பெருந்தொகை பணம் மீட்பு: 7 சந்தேக நபர்களுடன் பெண் கைது

கம்பஹா - பேலியகொட பகுதியில் 15 இலட்சம் ரூபாய் பணத்துடன் பெண்...

கொழும்பு துறைமுகத்தில் அழுகிய நிலையில் சடலம் மீட்கப்பட்டது

கொழும்புத் துறைமுகத்தில் உள்ள அதானி முனையத்தின் (Adani Terminal) கப்பல்துறைக்கு (Jetty)...

இரத்த வாந்தி எடுத்து குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் காரைநகர்-பண்டித்தாழ்வு பகுதியைச் சேர்ந்த கோணலிங்கம் சுந்தரலிங்கம் (வயது 47) என்பவருக்கு...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img