கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் அண்மையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொலைச் சம்பவம் கடந்த 07 ஆம் திகதி கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவின் 16 ஆவது ஒழுங்கைப் பிரதேசத்தில் இடம்பெற்றிருந்தது.
இச்சம்பவம் தொடர்பில் கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் போது குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கொழும்பு 13, ஆட்டுப்பட்டி தெருவைச் சேர்ந்த 32 வயதான பெண் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில், இந்தக் குற்றத்தைச் செய்ய வெளிநாட்டில் வசிக்கும் ஒரு குற்றக்கும்பல் உறுப்பினருடன் அவர் தொடர்பைப் பேணியுள்ளார். அத்துடன், குற்றவாளிகளுக்கு மோட்டார் வாகனம் ஒன்றினை வழங்கியமை மற்றும் கொல்லப்பட்டவர் பயணித்த வீதி பற்றிய தகவல்களை இந்தச் சந்தேகநபர் அந்தக் குற்றக்கும்பல் உறுப்பினருக்கு வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.
அதன்படி மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையிலேயே குறித்த சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
A 32-year-old woman from Huttu Patti Street, Colombo 13, has been arrested by the Colombo District Crime Prevention Unit in connection with the recent shooting murder that took place on 16th Lane in the Kotahena Police Division on the 7th of this month. Investigations revealed that the suspect maintained contact with an organized crime group member residing abroad, provided a motor vehicle to the perpetrators, and supplied the criminal gang member with information regarding the victim’s travel route. The Colombo District Crime Prevention Unit is conducting further investigations into the incident.



