நெடுந்தீவில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி மதுபானசாலையில் நேற்று (16) இரவு 7.00 மணியளவில் இரண்டு இளைஞர் குழுக்களுக்கு இடையே நடந்த மோதலில் இரண்டு இளைஞர்கள் வாள்வெட்டில் காயமடைந்துள்ளனர்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது: நேற்று இரவு 7.00 மணியளவில், ஒரு இளைஞர் குழு திடீரென மதுபானசாலைக்குள் நுழைந்து, அங்கிருந்த மற்றொரு இளைஞர் குழு மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் இரண்டு இளைஞர்கள் தலையிலும் முகத்திலும் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தத் தாக்குதல் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மீதும் வாள்வெட்டு குழுவினர் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர். அப்போது ஒருவர் கைது செய்யப்பட்டு, நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். தப்பிச் சென்ற மற்றவர்களைக் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
வாள்வெட்டு நடத்திய குழுவினர் மோட்டார் சைக்கிளில் வீதியில் பயணித்தபோது, பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக நடந்துகொண்டதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
குறித்த மதுபானசாலையில் இதற்கு முன்னரும் தாக்குதல் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
______________________________________________________________________
Two young men were injured in a sword attack that took place at a private guesthouse bar in Neduntheevu yesterday (16) at 7:00 PM. A group of youths on motorcycles allegedly entered the bar and attacked another group, leaving two victims with head and face injuries. When police arrived at the scene, the attackers also assaulted them before trying to escape. One suspect was arrested and is being held at the Neduntheevu Police Station, while a search is underway for the others. The attackers reportedly intimidated the public as they fled. It’s noted that similar incidents have occurred at this location before.