குருணாகலை-அனுராதபுரம் பிரதான வீதியில், தலாவ மீரிகம பகுதியில் லொறியும் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூவர் உயிரிழப்பு; நால்வர் காயம்.
இன்று (25) அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர். குருணாகலில் இருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த வேனும், எதிர்த் திசையில் வந்த லொறியும் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த ஏழு பேர் சிகிச்சைக்காக தலாவ மற்றும் அனுராதபுரம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆறு பேர் வேனில் பயணித்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
வேனில் பயணித்த மூவர் உயிரிழந்த நிலையில், தலாவ பொலிஸார் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

________________________________________________________________
A head-on collision between a lorry and a van on the Kurunegala-Anuradhapura main road, in the Thalawa Meerigama area, resulted in the death of three people and injuries to four others. The accident occurred early this morning (25th), when a van travelling from Kurunegala to Anuradhapura collided with a lorry coming from the opposite direction. All three deceased were passengers in the van. Thalawa Police are conducting further investigations.


