சுன்னாகம் பகுதியில் 7 பவுண் நகை மற்றும் 3 இலட்சம் ரூபா காசு என்பவற்றை திருடிய இளைஞர் ஒருவர் நேற்று (15) சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
வாடகைக்கு வீடு
சுன்னாகம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நகை மற்றும் பணம் என்பன திருடப்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், விசாரணைகளை மேற்கொண்ட சுன்னாகம் பொலிஸார், வட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரை நேற்று (15) கைது செய்தனர்.
குறித்த நபர் திருடுவதற்குத் தயாராகும் ஊரில் வாடகைக்கு ஒரு வீட்டை எடுத்துத் தங்கி நின்று, தான் திருடவுள்ள வீட்டை முழுமையாக நோட்டமிட்ட பின்னர், அந்த வீட்டை விட்டு வெளியேறி சில நாட்களின் பின்னர் திருட்டில் ஈடுபட்டு வந்த விடயம் அம்பலமாகியுள்ளது.
இது அவரது வழமையான செயற்பாடு எனத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
A 25-year-old man from Vaddukoddai was arrested yesterday (the 15th) by Chunnakam Police for allegedly stealing 7 sovereigns of gold jewellery and Rs. 300,000 in cash from a house in the Chunnakam area a few weeks ago. Investigations revealed that the suspect’s modus operandi was to rent a house in the target area, thoroughly surveil the chosen house, move out, and then commit the theft a few days later; police are taking steps to produce the arrested suspect before the Mallakam court.