வவுனியா மாநகர சபையின் சபை செயற்பாடுகளுக்கு மேல் முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் 19ஆம் திகதி வரை இடைக்கால தடை விதித்து செவ்வாய்க்கிழமை (21) தீர்ப்பளித்துள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது:
மாநகர சபை ஆட்சி
வவுனியா மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்கு ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணிக்கு ஆதரவு கோரப்பட்டபோது, ஜனநாயக தேசிய முன்னணியின் போனஸ் ஆசனத்தினால் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட பரமேஸ்வரன் கார்த்தீபன் என்பவர் பிரதி மேயர் பதவி கோரி ஆதரவளித்திருந்தார்.
எனினும், அவர் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட எல்லையில் வசித்த நிலையில் மாநகர சபையில் போட்டியிட்டமை, அதனூடாகப் பதவியைப் பெற்றமை என்பன சட்ட விதிகளுக்கு மீறிய செயற்பாடு எனக் குற்றம் சாட்டி, மாநகர சபை உறுப்பினர்களான தேசிய மக்கள் சக்தியின் சார்பில் க. விஜயகுமார் மற்றும் சுயேச்சை குழு உறுப்பினரான பிரேமதாஸ் சிவசுப்பிரமணியம் ஆகியோர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
இதன் பிரகாரம், கடந்த நான்கு தவணைகளின் பின்னர் நேற்று (21) நீதிமன்றத்தினால் மேற்குறித்த (சபை செயற்பாடுகளுக்கு இடைக்காலத் தடை) அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வழக்குத் தாக்கல் செய்தவர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
The Court of Appeal issued an interim injunction on Tuesday (the 21st), suspending the council proceedings of the Vavuniya Municipal Council until the 19th of next month. This decision stems from a petition filed by two councillors, K. Vijayakumar (National People’s Power) and Premadas Sivasubramaniam (Independent Group), arguing that Deputy Mayor Parameswaran Karthipan (elected via a bonus seat) was not legally eligible to contest or hold office in the Municipal Council as he resided outside its boundaries, within the Valaithottam Tamil Pradeshiya Sabha area. President’s Counsel Saliya Pieris appeared in court on behalf of the petitioners.