பிபில பேருந்து நிலையத்தில் பகலில் பத்து வயது சிறுமியை குடிபோதையில் முத்தமிட்டதற்காக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஒரு பொலிஸ் சார்ஜன்ட், தலா மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள மூன்று சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
கைதாகிப் பிணையில் விடுவிக்கப்பட்ட அந்த நபர், மஹியங்கனை, ரிதிமாலியத்த, நாரங்கசிய, அத்தே கனுவவைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் ஆவார். இவர் கண்டகெட்டிய காவல் நிலையத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிபோதையில் பொலிஸ் சார்ஜன்ட்
கடந்த அக்டோபர் 10 ஆம் திகதி பிபில பேருந்து நிலையத்தில், இந்தச் சிறுமிக்கு முத்தமிட்டதற்காகவே குறித்த பொலிஸ் சார்ஜன்ட் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவர் குடிபோதையில் இருந்ததாகவும், பத்து வயது சிறுமியைப் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு பிபில காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்நிலையில், சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், இந்த வழக்கு மேலதிக விசாரணைக்காக அக்டோபர் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும், சம்பவம் தொடர்பில் பிபில காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
A Police Sergeant attached to the Kandaketiya Police Station was arrested, produced in court, and subsequently released on three personal bails of three lakh rupees each, for allegedly kissing a ten-year-old girl in broad daylight at the Bibile bus stand on October 10th while he was drunk. The officer was accused of sexual harassment and drunken misconduct; the case has been postponed for further inquiry on October 19th, and Bibile Police are continuing their investigation.