மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 1 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும், சில இடங்களில் சுமார் 50 மில்லிமீட்டர் வரை மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மழை பெய்யும்போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
___________________________________________________________________
The Department of Meteorology has forecast rain for the Western and Sabaragamuwa provinces and the districts of Galle, Matara, Kandy, and Nuwara Eliya. Rain or thunderstorms are also expected in the Northern, Eastern, and Uva provinces after 1 PM, with some areas possibly receiving moderate rainfall of about 50 mm. The public is advised to take precautions against strong winds and lightning that may accompany the rain.