நாடு முழுவதும் கடந்த மாதத்தில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் விளைவாக, அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த 135 கடைகளின் வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.
அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்வோருக்கு எதிராகவும், அத்துடன் அரிசியை மறைத்து வைத்து விற்பனை செய்யாமல் இருப்பவர்களுக்கு எதிராகவும் இந்தச் சோதனைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.
அபராதம் மற்றும் சிறைத் தண்டனை
ஒரு தனி உரிமையாளர் அதிக விலைக்கு அரிசியை விற்று, அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ரூ. 100,000 முதல் ரூ. 500,000 வரை அபராதம் அல்லது 5 மாதங்கள் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம் என அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மாறாக, ஒரு தனியார் நிறுவனம் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், நீதிமன்றம் ரூ. 500,000 முதல் ரூ. 5,000,000 வரை அபராதம் விதிக்கலாம். அபராதம் அல்லது சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். அத்துடன், அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட பொருட்களை அதிகாரசபையின் சட்டத்தின் கீழ் அரசுடமையாக்கவும்கூட நீதிமன்றத்தால் முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது முறையாகக் குற்றம் செய்தால், அபராதத் தொகையின் இரு மடங்கு அபராதமும், ஒரு வருடம் வரை சிறைத்தண்டனையும் விதிக்க, நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதாக அந்த அதிகாரசபை மேலும் தெளிவுபடுத்தியுள்ளது.
The Consumer Affairs Authority (CAA) has filed legal cases against 135 rice traders across the country last month for selling rice at excessive prices and warned that raids will continue against those overpricing or hoarding rice. The CAA stated that an individual found guilty faces a fine between Rs. 100,000 to Rs. 500,000 or up to 5 months in prison, or both, while a convicted company may face a fine between Rs. 500,000 to Rs. 5,000,000. Repeat offenders face double the fine and up to one year in prison under the CAA Act.