மத்தியப் பிரதேசத்தின் அசோக்நகர் மாவட்ட மருத்துவமனை வளாகத்தில், சில ஜோடிகள் அநாகரிக செயல்களில் ஈடுபடும் ஆட்சேபனைக்குரிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
மருத்துவமனையின் காத்திருப்பு பகுதியில் காதலர்கள் அநாகரிகமாக நடந்துகொண்டது ஒரு வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
விரிவான விசாரணை
மற்றொரு வீடியோவில், மருத்துவமனை வளாகத்தில் உள்ள பூங்கா பகுதியில் புதர்களுக்குப் பின்னால் ஒரு ஜோடி அநாகரிகச் செயல்களில் ஈடுபட்டது பதிவாகி, இந்தச் சர்ச்சையை மேலும் அதிகரித்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய சிவில் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பூபேந்திர சிங், மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் குறைபாடுகள் இருப்பதை ஒப்புக்கொண்டார். இத்தகைய செயல்கள் மிகவும் அநாகரீகமானவை என்று அவர் கண்டித்ததுடன், இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களுக்குச் சம்மன் அனுப்பப்படும் என்றும், கண்காணிப்பையும் பாதுகாப்பையும் பலப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டாக்டர் சிங் உறுதி அளித்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து மருத்துவமனை வளாகத்தின் பாதுகாப்பு ஏஜென்சியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
Controversial videos showing couples engaging in indecent acts within the campus of the Ashoknagar District Hospital in Madhya Pradesh have been leaked on social media, sparking a major controversy. One video recorded couples in the waiting area, and another captured them behind bushes in the park area. The Chief Civil Surgeon, Dr. Bhupendra Singh, admitted to administrative shortcomings, condemned the acts as highly indecent, and ordered a comprehensive investigation. He assured that security personnel on duty would be summoned and immediate action would be taken to strengthen surveillance and security, with a notice also being sent to the contracted security agency for an explanation.


