Wednesday, December 3, 2025

மாணவி கர்ப்பம்; தாயின் கள்ளக்காதலன் தலைமறைவு

கல்முனை தலைமையகப் பொலிஸ் பிரிவில் பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பமான சம்பவம் பதிவாகியுள்ளது.

அம்பாறை மாவட்டம், கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்த மாணவியே இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டு கல்முனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தையார் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கமைய, இச்சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையகப் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவுப் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
මැයි දින සංවිධායකවරුන්ට පොලීසියෙන් දැනුම්දීමක්

பாடசாலைக்கு மாணவி இரண்டு மாதங்களாக வராதது குறித்துப் பாடசாலை நிர்வாகம் தாயாரை வினவியபோது, அவர் உரிய பதிலளிக்காமலும் முரண்பட்ட பதில்கள் கூறியதாலும் சந்தேகம் வலுத்தது. இதனையடுத்து, மாணவியின் தந்தை குறித்த விடயத்தை அறிந்து பொலிஸாரின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளார்.

குடும்பத்தின் இரண்டாவது பிள்ளையான குறித்த மாணவி, அவரது தாயின் கள்ளத் தொடர்பில் இருந்த நபரால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும், இச்சம்பவத்துக்கு உடந்தையாக இருந்த மாணவியின் தாயார் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். மாணவியின் பெற்றோர் விவாகரத்துப் பெற்ற நிலையில் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில், கல்முனைப் பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அஸாரின் வழிகாட்டுதலின் பேரில், தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லசந்த களுவாராய்ச்சி தலைமையில் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவுப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

A schoolgirl studying in the Kalmunai Educational Zone has been admitted to Kalmunai Hospital after being sexually assaulted and becoming pregnant, an incident reported under the Kalmunai Headquarters Police Division. Initial investigations, triggered by a complaint from the victim’s father after the school noted her two-month absence, revealed that the girl was allegedly assaulted by her mother’s extramarital partner. While the girl’s mother, who is divorced from the father, has been arrested for complicity and later released on bail, the main suspect is currently at large, and a detailed investigation is ongoing.

Hot this week

Accounts Clerk Vacancy

🔸 IDM Campus – Kurumankadu, Vavuniya 📌 Vacancy: Accounts Clerk Qualifications...

Sales Rep Vacancy

📢 வேலைவாய்ப்பு அறிவிப்பு – வவுனியா பண்டாரிக்குளம் 📍 இடம்: குளோப் மில்...

இரு துண்டுகளாக பாலம்; போக்குவரத்து சரிசெய்யும் பணி தீவிரம்

பரந்தன் புதுக்குடியிருப்பு ஊடான முல்லைத்தீவு A35 வீதி இரண்டாக பிளவுபட்டிருப்பதால் போக்குவரத்து...

இரண்டு குழந்தைகளுடன் மல்வத்து ஓயாவில் குதித்த தாய்; மீட்பு நடவடிக்கைகள்

அனுராதபுரத்தில் உயிரை மாய்த்துக்கொள்வதற்காக மல்வத்து ஓயாவில் குதித்த ஒரு தாயையும் இரண்டு...

இலங்கை அனர்த்த மீட்புப் பணிக்கு ஆப்பிள் நிதியுதவி

வெள்ளம், மண்சரிவு மற்றும் பலத்த காற்று காரணமாக அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை...

Topics

Accounts Clerk Vacancy

🔸 IDM Campus – Kurumankadu, Vavuniya 📌 Vacancy: Accounts Clerk Qualifications...

Sales Rep Vacancy

📢 வேலைவாய்ப்பு அறிவிப்பு – வவுனியா பண்டாரிக்குளம் 📍 இடம்: குளோப் மில்...

இரு துண்டுகளாக பாலம்; போக்குவரத்து சரிசெய்யும் பணி தீவிரம்

பரந்தன் புதுக்குடியிருப்பு ஊடான முல்லைத்தீவு A35 வீதி இரண்டாக பிளவுபட்டிருப்பதால் போக்குவரத்து...

இரண்டு குழந்தைகளுடன் மல்வத்து ஓயாவில் குதித்த தாய்; மீட்பு நடவடிக்கைகள்

அனுராதபுரத்தில் உயிரை மாய்த்துக்கொள்வதற்காக மல்வத்து ஓயாவில் குதித்த ஒரு தாயையும் இரண்டு...

இலங்கை அனர்த்த மீட்புப் பணிக்கு ஆப்பிள் நிதியுதவி

வெள்ளம், மண்சரிவு மற்றும் பலத்த காற்று காரணமாக அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை...

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தொலைத்தொடர்பு; எதிர்பார்ப்பு தெரிவிப்பு

அனர்த்த நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்டிருந்த தொலைபேசி மற்றும் இணையத் தொடர்பு வலையமைப்பை...

சாரதி உரிம சேவை இன்று முதல் வழமைக்கு

சீரற்ற வானிலை காரணமாகத் தடைப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக்...

மதியம் 2 மணிக்குப் பின் மழை வாய்ப்பு

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அத்துடன் பதுளை மற்றும் மாத்தளை...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img