Friday, October 24, 2025

தமிழர் பகுதியில் நடந்த கோர விபத்தில் பலர் படுகாயம்

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகனேரி சந்தியில் நேற்றைய தினம் மாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் பொதுமக்களின் உதவியுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பின், மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணை

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது:

கல்முனையிலிருந்து பொலன்னறுவை நோக்கிப் பயணித்த வேன் ஒன்றும், பொலன்னறுவையிலிருந்து கொங்கிறீட் கல் ஏற்றி வாழைச்சேனை பக்கம் நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வேனில் பயணித்த அனைவருமே காயங்களுக்குள்ளான நிலையில் பொதுமக்களினால் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இதில் காயம் அடைந்தோரில் இரண்டு ஆண்களும், ஐந்து பெண்களும் உள்ளடங்குகின்றனர். குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை போக்குவரத்துப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


 

Seven people were injured in a major accident that occurred yesterday evening at the Vakeneri Junction in the Valaichenai Police Division, Batticaloa. The injured were initially taken to the Valaichenai Base Hospital with the help of the public and were later transferred to the Batticaloa Teaching Hospital for further treatment. The accident involved a head-on collision between a van travelling from Kalmunai to Polonnaruwa and a tipper truck transporting concrete stones from Polonnaruwa towards Valaichenai. All those injured were van occupants, including two men and five women. Valaichenai Traffic Police are conducting further investigations.

Hot this week

இலங்கையில் வாகன இறக்குமதி; மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட தகவல்

இலங்கையில் வாகன இறக்குமதிகள், 2026 ஆம் ஆண்டில் சாதாரண நிலைக்குத் திரும்பும்...

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் குறைவு

இலங்கையில் தங்கத்தின் விலையில் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த...

வைத்தியசாலையில் பெரும் அடாவடித்தனம்; தனிநபர் காரணமாக மருத்துவ சேவைகள் நிறுத்தம்

காயமடைந்த ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஒருவர் வைத்தியசாலை ஊழியர்களை அச்சுறுத்திய...

2 தேங்காய் திருட்டுக்காக நடந்த கொலை; 24 ஆண்டுகள் கழித்து குற்றவாளிக்கு மரண தண்டனை

இரண்டு தேங்காய்களைத் திருடியதற்காக ஒருவரை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த...

பெருந்தொகை பணம் மீட்பு: 7 சந்தேக நபர்களுடன் பெண் கைது

கம்பஹா - பேலியகொட பகுதியில் 15 இலட்சம் ரூபாய் பணத்துடன் பெண்...

Topics

இலங்கையில் வாகன இறக்குமதி; மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட தகவல்

இலங்கையில் வாகன இறக்குமதிகள், 2026 ஆம் ஆண்டில் சாதாரண நிலைக்குத் திரும்பும்...

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் குறைவு

இலங்கையில் தங்கத்தின் விலையில் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த...

வைத்தியசாலையில் பெரும் அடாவடித்தனம்; தனிநபர் காரணமாக மருத்துவ சேவைகள் நிறுத்தம்

காயமடைந்த ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஒருவர் வைத்தியசாலை ஊழியர்களை அச்சுறுத்திய...

2 தேங்காய் திருட்டுக்காக நடந்த கொலை; 24 ஆண்டுகள் கழித்து குற்றவாளிக்கு மரண தண்டனை

இரண்டு தேங்காய்களைத் திருடியதற்காக ஒருவரை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த...

பெருந்தொகை பணம் மீட்பு: 7 சந்தேக நபர்களுடன் பெண் கைது

கம்பஹா - பேலியகொட பகுதியில் 15 இலட்சம் ரூபாய் பணத்துடன் பெண்...

கொழும்பு துறைமுகத்தில் அழுகிய நிலையில் சடலம் மீட்கப்பட்டது

கொழும்புத் துறைமுகத்தில் உள்ள அதானி முனையத்தின் (Adani Terminal) கப்பல்துறைக்கு (Jetty)...

இரத்த வாந்தி எடுத்து குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் காரைநகர்-பண்டித்தாழ்வு பகுதியைச் சேர்ந்த கோணலிங்கம் சுந்தரலிங்கம் (வயது 47) என்பவருக்கு...

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img