Wednesday, October 22, 2025

திருமண மறுப்பு காரணமாக அண்ணியாரின் அதிர்ச்சி செயல்; குடும்பம் பரபரப்பு

தங்கையிடம் பழகி, பின்னர் கழற்றி விட்டு மற்றொரு பெண்ணுடன் பழக ஆர்வம் காட்டியதால், ஆத்திரமடைந்த அண்ணி கொழுந்தனின் பிறப்புறுப்பை அறுத்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்:

திருமணத்திற்கு மறுத்த கொழுந்தனார்

இந்தியா உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அடுத்த புர்ஹான் பகுதியைச் சேர்ந்தவர் யோகேஷ். இவர் ஒரு பொறியியலாளர் ஆவார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் திருமணம் நடைபெறவிருந்தது.

யோகேஷின் அண்ணன் மனைவி அர்ச்சனா, தனது தங்கையைத்தான் யோகேஷ் திருமணம் செய்ய வேண்டும் எனக் கூறி வந்துள்ளார்.

இந்த நிலையில், யோகேஷுக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயம் ஆனதால் அவர் மீது அர்ச்சனாவுக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு விடுமுறையில் யோகேஷ் வீட்டிற்குச் சென்றுள்ளார். தீபாவளி பூஜை முடிந்தவுடன் அர்ச்சனா யோகேஷை தனது அறைக்கு வரவழைத்துள்ளார்.

அப்போது, தனது தங்கையைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்கு யோகேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். அப்போது ஆத்திரம் உச்சம் அடைந்த அர்ச்சனா, “எனது தங்கையைத் தவிர வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. எனது தங்கைக்குக் கிடைக்காதவர் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது” எனக் கூறியபடி கத்தியை எடுத்து யோகேஷின் பிறப்புறுப்பை வெட்டி வீசி எறிந்துள்ளார்.

வலியால் துடித்த யோகேஷை மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பொலிஸார், அர்ச்சனாவைக் கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

A shocking incident occurred in Burhan, Agra, Uttar Pradesh, India, where a sister-in-law, Archana, mutilated her brother-in-law’s (Yogesh, a 22-year-old engineer) private parts with a knife in a fit of rage. Archana had insisted that Yogesh, who was engaged to another woman for a November wedding, should marry her younger sister instead. During an argument after the Diwali festival, Archana became furious over his refusal and carried out the brutal attack, stating, “He who cannot be mine (my sister’s) cannot be anyone else’s.” Yogesh was rushed to the hospital with critical injuries, and the police have registered a case and arrested Archana.

Hot this week

விபச்சார விடுதியில் சிக்கிய குடும்பப் பெண்கள் கைது

கேகாலை - வரக்காப்பொல நகரத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி...

நாட்டில் மரக்கறிகளின் விலை உச்சத்தை எட்டும் நிலையில் உள்ளது

நாட்டில் தற்போது நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக, எதிர்வரும் நாட்களில்...

வவுனியா மாநகர சபையின் செயல்பாடுகள் தடை; நீதிமன்றம் அதிரடி உத்தரவு வெளியிட்டது

வவுனியா மாநகர சபையின் சபை செயற்பாடுகளுக்கு மேல் முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும்...

பேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்த மாணவிக்கு ஏற்பட்ட விபத்து; பரிதாபமாக உயிரிழப்பு

நேற்று பெய்த கனமழை காரணமாக பாதுகாப்பற்ற மதகில் வீழ்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த...

யாழில் போதைப்பொருள் பழக்கத்தால் இளம் பெண் உயிரிழப்பு

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர் தவறான...

Topics

விபச்சார விடுதியில் சிக்கிய குடும்பப் பெண்கள் கைது

கேகாலை - வரக்காப்பொல நகரத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி...

நாட்டில் மரக்கறிகளின் விலை உச்சத்தை எட்டும் நிலையில் உள்ளது

நாட்டில் தற்போது நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக, எதிர்வரும் நாட்களில்...

வவுனியா மாநகர சபையின் செயல்பாடுகள் தடை; நீதிமன்றம் அதிரடி உத்தரவு வெளியிட்டது

வவுனியா மாநகர சபையின் சபை செயற்பாடுகளுக்கு மேல் முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும்...

பேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்த மாணவிக்கு ஏற்பட்ட விபத்து; பரிதாபமாக உயிரிழப்பு

நேற்று பெய்த கனமழை காரணமாக பாதுகாப்பற்ற மதகில் வீழ்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த...

யாழில் போதைப்பொருள் பழக்கத்தால் இளம் பெண் உயிரிழப்பு

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர் தவறான...

நாட்டின் பல பகுதிகளில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி...

மன்னார்–மதவாச்சி பிரதான சாலையில் சொகுசு பேருந்து விபத்து

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் சொகுசு பயணிகள் பேருந்து ஒன்று...

தமிழர் பகுதியில் இளம் குடும்பஸ்தருக்கு நடந்த பெரும் கொடூரம்; துயரில் கதறும் குடும்பம்

கிளிநொச்சி, அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் - ஈச்சங்குளம் பகுதியில் இளைஞர்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img