தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி உயிரிழந்த நிலையில் நேற்று சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று காலை பயணித்த ரயில் மோதி உயிரிழந்த நிலையில் ஒரு சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட நபர் நீர்கொழும்பைச் சேர்ந்த 60 வயதுடைய ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் நடந்த போது, குறித்த ரயில் சௌத் பார் ரயில் நிலையத்தில் தரித்து நின்று பயணிகளை ஏற்றிய பின்னர் மீண்டும் கொழும்பு நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தது. அப்போது, சௌத் பார் – தள்ளாடி புகையிரத வீதியில் உள்ள இரட்டை கண் பாலத்திற்கு அருகில், இந்தச் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. ரயிலில் மோதியதால் அந்த நபரின் உடல் பாகங்கள் சிதறிய நிலையில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்ட நிலையில், அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டனர். மீட்கப்பட்ட சடலம் தற்போது மன்னார் பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் மன்னார் வைத்தியசாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
A body was recovered yesterday after being hit by a train traveling from Talaimannar to Colombo. The deceased has been identified as a 60-year-old man from Negombo. The incident occurred near the double-eye bridge on the South Bar – Thalladi railway line, and the body has been placed in the mortuary at Mannar General Hospital as police conduct further investigations.


