Tuesday, October 14, 2025

கொழும்பிலிருந்து இந்தியா சென்ற இலங்கையர் மேற்கொண்ட மோசமான செயல்

இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கை ஒன்றில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நடவடிக்கையின் போது, 500 மில்லியன் இந்திய ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள போதைப்பொருள் உட்பட அதிக நச்சுத்தன்மை கொண்ட கஞ்சா அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதில் 45.400 கிலோகிராம் ஹைட்ரோபோனிக் கஞ்சா மற்றும் சைலோசைபின் (Psilocybin) அல்லது மேஜிக் காளான்கள் என அழைக்கப்படும் 6 கிலோகிராம் காளான்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

500 மில்லியன் இந்திய ரூபாய்

தாய்லாந்தில் இருந்து இலங்கை வழியாக இந்தியாவிற்கு போதைப்பொருள் கடத்தும் நடவடிக்கை நடைபெறுவதாகக் கிடைத்த இரகசியத் தகவலைத் தொடர்ந்து, கொழும்பில் இருந்து கெம்பேகவுடா விமான நிலையத்திற்கு 9 ஆம் திகதி வந்த இரண்டு நபர்களை இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் (NCB) கைது செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அப்போது, அவர்களின் உடைமைகளில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, இந்த போதைப்பொருள் கடத்தல் தொடர்பான பல விவரங்கள் தெரியவந்ததாகக் கூறப்படுகின்றது.

அதன்படி, இந்தக் கடத்தல் நடவடிக்கையை ஒரு இலங்கையரே மேற்கொண்டதுடன், அவர் வேறொரு விமானத்தில் வந்தபோது இந்தியப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் குறித்து இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் மேலதிக விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


 

An Eelam (Sri Lankan) national has been arrested in India as part of a drug trafficking operation where authorities seized hydroponic cannabis (45.400 kg) and magic mushrooms (6 kg), collectively valued at over 500 million Indian Rupees. The arrests, initiated based on a tip-off about trafficking from Thailand via Sri Lanka, began with the apprehension of two individuals arriving from Colombo at Kempegowda Airport on the 9th, and subsequent interrogation led to the arrest of the main Sri Lankan perpetrator who arrived on a different flight; the Narcotics Control Bureau (NCB) has launched further investigations.

Hot this week

Vacancy Data entry operator

LCP DISTRIBUTOR Data entry operator (female) computer knowledge in excel and...

Vacancy Delivery Boy

LCP DISTRIBUTOR Delivery Boy vacancy available No bike needed Age below 35 Salary...

Vacancy Admin Assistant

🚨 WE’RE HIRING! 🚨 Are you looking to start or...

யாழ்தேவி ரயில் மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு; துயரில் உறைந்த குடும்பம்

பளை - இத்தாவில் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று ரயிலுடன் மோதுண்டதில் சாரதி...

காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு; மாமனாரின் தாக்குதலில் மருமகன் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கூட்டத்து அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (32)....

Topics

Vacancy Data entry operator

LCP DISTRIBUTOR Data entry operator (female) computer knowledge in excel and...

Vacancy Delivery Boy

LCP DISTRIBUTOR Delivery Boy vacancy available No bike needed Age below 35 Salary...

Vacancy Admin Assistant

🚨 WE’RE HIRING! 🚨 Are you looking to start or...

யாழ்தேவி ரயில் மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு; துயரில் உறைந்த குடும்பம்

பளை - இத்தாவில் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று ரயிலுடன் மோதுண்டதில் சாரதி...

காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு; மாமனாரின் தாக்குதலில் மருமகன் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கூட்டத்து அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (32)....

பல அரச நிறுவனங்களின் ஆன்லைன் சேவைகள் தடைபட்டது

இலங்கை அரச மேகக்கணிமை (Lanka Government Cloud - LGC) சேவையில்...

நாளை முதல் இலங்கை வரும் வெளிநாட்டினருக்கு ETA கட்டாயம்

இலங்கைக்கு வருகை தரும் அனைத்து வெளிநாட்டினரும், நாட்டிற்குள் நுழைவதற்கு முன் மின்னணு...

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img