யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்த நிலையில் காப்பாற்றப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
அவர் நேற்றைய தினம் (16.10.2025) உயிரிழந்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி – ஆனந்தபுரத்தைச் சேர்ந்த நாகநாதன் கிருஷா என்பவரே இவ்வாறு உயிரிழந்த யுவதி ஆவார்.
மன விரக்தி காரணமாக
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த யுவதி மன விரக்தி காரணமாக கடந்த 14 ஆம் திகதி இரவு தவறான முடிவெடுத்துள்ளார்.

இந்நிலையில், அவரை மீட்ட குடும்பத்தினர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக 15 ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இருப்பினும், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் (அக்டோபர் 16) அவர் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
A young woman named Naganathan Kirusha from Anandapuram, Kilinochchi, who had attempted to end her life due to mental distress on the night of October 14th, has died while receiving treatment at the Jaffna Teaching Hospital yesterday (October 16, 2025). She was initially admitted to Kilinochchi Hospital and later transferred to Jaffna for further care, but succumbed to her condition; the inquest into her death was conducted by Sudden Death Inquiry Officer Namasivayam Premkumar.



