யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையில் பிறந்த இரட்டைக் குழந்தைகள் சிறிது நேரத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் குழந்தைகளின் பெற்றோர், சோமசுந்தரம் வீதி, ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்த தகவல்களின்படி, கடந்த 21ஆம் திகதி இரவு குழந்தைகளின் தாயாருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை வெளியே எடுக்கப்பட்ட நிலையில், பெண் குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது. உயிருடன் பிறந்த ஆண் குழந்தை 45 நிமிடங்களுக்குப் பிறகு உயிரிழந்துள்ளது.
சடலங்கள் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
_______________________________________________________________________
A pair of twins born at Jaffna Teaching Hospital passed away shortly after birth, causing great sorrow. The mother, from Aanaippottai, was rushed to the hospital after suffering a sudden seizure. A cesarean section was performed, but the baby girl was stillborn, and the baby boy died 45 minutes later. The deaths are being investigated by a sudden death inquiry officer.