Saturday, November 22, 2025

உல்லாசத்துக்கு அழைத்த இளைஞர்களைக் கொடூரமாக சித்ரவதை செய்த பெண்!

இந்தியாவில், இரண்டு இளைஞர்களை உல்லாசத்திற்கு அழைத்து, பணம் மற்றும் செல்போனைப் பறித்ததுடன், அவர்களின் மர்ம உறுப்பில் ‘ஸ்டேப்ளர் பின்’ அடித்துச் சித்திரவதை செய்த ஒரு தம்பதியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம், சரல்குன்னு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயேஷ் (29). இவருடைய மனைவி ரஷ்மி (23). இவருக்கு, ஆலப்புழையைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில், ரஷ்மி அந்த வாலிபரிடம், “நாம் ஒன்றாக இருக்கலாம்” என்று கூறித் தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். அதை நம்பிய அந்த வாலிபர், கடந்த 1ஆம் திகதி ரஷ்மியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். வீட்டிற்குள் நுழைந்த அந்த இளைஞன் ரஷ்மியுடன் நெருங்கிச் சென்றபோது, அங்கு மறைந்திருந்த ரஷ்மியின் கணவர் ஜெயேஷ், அதை தனது செல்போனில் படம் எடுத்துள்ளார்.

சிறிதுநேரத்தில் அங்கு வந்த ஜெயேஷ், தனது மனைவியுடன் சேர்ந்து அந்த இளைஞனை மிரட்டி, அவனிடமிருந்த விலை உயர்ந்த செல்போன் மற்றும் ரூ. 6 ஆயிரத்தைப் பறித்தனர். அத்துடன், அந்த வாலிபரின் கைகளைக் கட்டித் தொங்கவிட்டு, அவரது மர்ம உறுப்பில் 26 ‘ஸ்டேப்ளர் பின்’களை அடித்துச் சித்திரவதை செய்துள்ளனர். மேலும், அவரது கை விரல் நகங்களையும் பிடுங்கியுள்ளனர். இதில் வலி தாங்கமுடியாமல் அந்த இளைஞன் அலறியுள்ளார்.

உடனே அவரது வாயைத் துணியால் கட்டி, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்குக் கொண்டுபோட்டுவிட்டுச் சென்றனர். அப்போது அந்த வழியாகச் சென்ற ஒருவர், இளைஞனின் முனகல் சத்தம் கேட்டு, அவரை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த ஆரன்மூளா பொலிஸார், இளைஞன் சிகிச்சை பெறும் வைத்தியசாலைக்குச் சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து, ஜெயேஷ் மற்றும் அவரது மனைவி ரஷ்மியைக் கைதுசெய்தனர்.

பின்னர் பொலிஸார் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. பணத்திற்காக ரஷ்மி இளைஞர்களைக் குறிவைத்து முதலில் ஆசை வார்த்தை கூறி வலையில் வீழ்த்தியுள்ளார். பின்னர் வீட்டிற்கு அழைத்து, பணம் மற்றும் செல்போனைப் பறித்துள்ளார். இந்தச் செயல்களுக்கு ஜெயேஷ் உடந்தையாக இருந்துள்ளார். கடந்த 5ஆம் திகதி ஓணம் விழா அன்று, ரான்னியைச் சேர்ந்த, தன்னுடன் பணிபுரியும் மற்றொரு இளைஞனையும் ரஷ்மி வீட்டிற்கு அழைத்து, அவரிடமிருந்தும் பணத்தைப் பறித்து, சித்திரவதை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஆரன்முளா பொலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.


 

In Kerala, India, a couple has been arrested for luring young men for sexual encounters and then torturing them for money and valuables. The suspects, Jayesh (29) and his wife Rashmi (23), would use social media to attract victims. After bringing a man to their home, they would threaten and rob him. In a particularly horrific incident, they allegedly tortured a man by binding him, pulling out his fingernails, and stapling his genitals before leaving him in an isolated area. Another similar case involving a different man was also revealed during the police investigation.

Hot this week

விட்டு போனதற்கு நன்றி – Thank You For Leaving: Learning to Be Okay with Saying Goodbye

இந்தப் பகுதி, ரித்விக் சிங்கின் "Thank You For Leaving: Learning to...

கொழும்பு; மனைவியின் ஆபாச வீடியோவை மைத்துனிக்கு அனுப்பிய கணவன்

தனது மனைவியின் ஆபாச வீடியோவை சமூக ஊடகங்கள் மூலம் அவரது சகோதரிக்கு...

யாழில் பிறந்த இரட்டை குழந்தைகள் உயிரிழப்பு!

யாழில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒருவரான பெண் குழந்தை ஏற்கனவே உயிரிழந்த...

அயல் வீட்டில் தகராறு; தாய் மற்றும் மகன் மீது அசிட் தாக்குதல்

இரத்தினபுரி அயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொலம்பேவ பகுதியில், பெண்ணொருவர் மற்றும் அவரது...

அம்மாவின் நகையை திருடிய மகன் விசாரணை நேரத்தில் தப்பியோட்டம்

அம்மாவின் நகையைத் திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இன்று (20) திருகோணமலை...

Topics

விட்டு போனதற்கு நன்றி – Thank You For Leaving: Learning to Be Okay with Saying Goodbye

இந்தப் பகுதி, ரித்விக் சிங்கின் "Thank You For Leaving: Learning to...

கொழும்பு; மனைவியின் ஆபாச வீடியோவை மைத்துனிக்கு அனுப்பிய கணவன்

தனது மனைவியின் ஆபாச வீடியோவை சமூக ஊடகங்கள் மூலம் அவரது சகோதரிக்கு...

யாழில் பிறந்த இரட்டை குழந்தைகள் உயிரிழப்பு!

யாழில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒருவரான பெண் குழந்தை ஏற்கனவே உயிரிழந்த...

அயல் வீட்டில் தகராறு; தாய் மற்றும் மகன் மீது அசிட் தாக்குதல்

இரத்தினபுரி அயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொலம்பேவ பகுதியில், பெண்ணொருவர் மற்றும் அவரது...

அம்மாவின் நகையை திருடிய மகன் விசாரணை நேரத்தில் தப்பியோட்டம்

அம்மாவின் நகையைத் திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இன்று (20) திருகோணமலை...

யாழில் தனிமையில் வசித்த பெண் ஒருவர் சடலமாக மீட்பு

யாழில் தனிமையில் வசித்து வந்த பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை வீதி...

பொதுக் கூட்டத்தால் விசேட போக்குவரத்து கட்டுப்பாடு

கொழும்பின் மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கில் இன்று...

இலங்கையில் அவசர தரையிறங்கிய மிகப் பெரிய பயணிகள் விமானம்

டுபாயில் இருந்து அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img