ஓட்டுநர் உரிமங்களை வழங்கும் பணி ஒக்டோபர் 18 ஆம் திகதி முதல் மீண்டும் தொடங்கும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார்.

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திடம் தற்போது எட்டு இலட்சம் (800,000) ஓட்டுநர் உரிம அட்டைகள் கையிருப்பில் உள்ளன என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் இன்று (08) நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்து உரையாற்றும் போதே இந்தத் தகவல்களைத் தெரிவித்தார்.
ஓட்டுநர் உரிம அட்டை அச்சிடும் செலவில் சேமிப்பு
மோட்டார் போக்குவரத்துத் துறையிடம் தற்போது உள்ள 8 இலட்சம் அட்டைகள் தீர்ந்து போவதற்குள், மேலும் ஒரு மில்லியன் (1,000,000) ஒட்டுநர் உரிம அட்டைகளை முற்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
முன்னதாக, ஒட்டுநர் உரிமங்களை அச்சிடும் பணியை ‘மெட்ரோபொலிட்டன்’ என்ற தனியார் நிறுவனம் செய்து வந்தது. அப்போது, ஒரு ஓட்டுநர் உரிமத்தை அச்சிட ரூ. 534.54 செலவானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், எதிர்காலத்தில் அரசாங்கமே ஒட்டுநர் உரிமங்களை அச்சிடத் தொடங்குவதால், ஒரு ஒட்டுநர் உரிமத்தை அச்சிடுவதற்குத் தோராயமாக ரூ. 368.16 மட்டுமே செலவாகும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க வலியுறுத்தினார். அதன் மூலம், ஒரு ஓட்டுநர் உரிமத்தை அச்சிடுவதில் அரசாங்கம் ரூ. 166 சேமிக்க முடியும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
The Minister of Transport, Highways, Ports, and Civil Aviation, Bimal Rathnayake, announced that the process of issuing driver’s licenses will resume on October 18th. The Minister stated in Parliament that the Motor Traffic Department currently has a stock of 800,000 license cards and plans to pre-order an additional 1 million cards before the current stock runs out. He highlighted that the government will save money by taking over the printing process; while a private company previously charged Rs. 534.54 per card, government printing is estimated to cost only Rs. 368.16, resulting in a saving of Rs. 166 per license.


