நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்குச் சாதகமான சூழ்நிலை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனால் ஏற்படக்கூடிய கடும் காற்று மற்றும் பலத்த மின்னல் போன்றவற்றால் உண்டாகும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக, வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 50 மி.மீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.
The Department of Meteorology has advised the public to take necessary precautions against the dangers posed by strong winds and lightning strikes, as favorable conditions for evening thundershowers prevail across many parts of the country. Rainfall or thunderstorms are expected in most areas after 1:00 PM, with fairly heavy rainfall exceeding 50 mm possible in the Northern, North Central, Eastern, Central, and Uva provinces. Light rain is also forecasted in the Western, North Western provinces, and the Galle and Matara districts during the morning hours.