இணையத்தில் இலங்கை சிறார்களின் ஆபாச காணொளிகள் மற்றும் படங்களை வெளியிடுவதாக நெக்மெக் என்ற இணைய நிறுவனம் வெளியிட்ட தகவல் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் முன்வைத்த சமர்ப்பணங்களை கருத்தில் கொண்டு, கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா இந்த உத்தரவை அளித்துள்ளார். அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ‘நெக்மெக்’ என்ற நிறுவனம் உலகின் எட்டு நாடுகளை உறுப்பினராக கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தில் உறுப்புரிமை பெற்ற நாடுகளில் சிறுவர்கள் தொடர்பான ஆபாச காணொளிகள் மற்றும் படங்கள் இணையத்தில் வெளியிடப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கைச் சிறுவர்களின் ஆபாச காணொளிகள் மற்றும் படங்கள் கணினியூடாக வெளியிடப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் கண்டறிந்துள்ளது. அதற்கான அறிவிப்பு இலங்கைக்கு கிடைத்ததை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். மேலும், பல முறைப்பாடுகள் வந்தாலும், பாதிக்கப்பட்ட சிறுவர்கள் எவரும் கண்டறியப்படவில்லை எனவும் பணியகம் தெரிவித்துள்ளது.
இதனைப் பின்பற்றி, பொலிஸார் மற்றும் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் சமர்ப்பித்த பிரசினைகளை நீதிமன்றம் பரிசீலித்து உடனடி விசாரணையை தொடங்க உத்தரவிட்டுள்ளது.