சென்னை, கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பிரபல நட்சத்திர ஹோட்டலில் இருக்கும் பப்பில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் விருந்து நடைபெறுவதாக போதைப்பொருள் தடுப்புப் பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது.
பொலிஸார் சோதனை மற்றும் கைது
அதன்படி பொலிஸார் நடத்திய சோதனையில், விருந்து முடிந்த பின்னர், சிலர் அதே ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கியிருந்து போதைப்பொருட்களைப் பயன்படுத்துவது தெரிய வந்தது. அவர்கள் தங்கியிருந்த அறைக்குச் சென்று சோதனை மேற்கொண்டபோது, அங்கு அனைவரும் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்தது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, 3 பெண்கள் மற்றும் ஹோட்டல் மேலாளர் உட்பட மொத்தம் 18 பேரைப் பொலிஸார் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் வெளியான தகவல்கள்
கைது செய்யப்பட்டவர்கள், வாட்ஸ்அப் குழு ஒன்றை அமைத்து மாதம் இருமுறை இதுபோன்ற போதை விருந்துகளில் பங்கேற்று வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 18 பேரில், ஒரு பெண் ‘ஆனந்தபுரத்து வீடு’ திரைப்படத்தின் இசையமைப்பாளரின் மகள் என்றும், அவர் பெங்களூருவைச் சேர்ந்தவர் என்றாலும் சென்னையில் உள்ள மகளிர் விடுதியில் தங்கிப் பணியாற்றி வருவதும் தெரிய வந்தது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார், கைது செய்யப்பட்ட 18 பேரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து, 18 பேரையும் பிணையில் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
Police in Chennai arrested 18 individuals, including three women and a hotel manager, after raiding a private party at a pub in a famous star hotel on Poonamallee Highway in Kilpauk, following a tip-off about an illegal drug gathering. The group was found smoking ganja (cannabis) in a hotel room after the party. Investigations revealed they used a WhatsApp group to organize these bi-monthly drug parties. One of the arrested women was identified as the daughter of the music director of the film ‘Anandhapurathu Veedu’. All 18 individuals were later released on bail by the Egmore Court.