சென்னை அனல்மின் நிலையத்தில் கட்டுமான பணியின் போது 9 வடமாநில தொழிலாளர்கள் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எண்ணூர் அனல் மின் நிலையத்தில் புதிய அலகுகளுக்கான ராட்சத வளைவு அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்தப் பணியின் போது திடீரென சாரம் சரிந்து விழுந்ததில் அங்கிருந்த 9 வடமாநிலத் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தச் சோகச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த எதிர்பாராத விபத்தில் காயமடைந்த தொழிலாளர்கள், உடனடியாக மீட்கப்பட்டு, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நிவாரண அறிவிப்பு
இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ. 10 லட்சம் நிவாரண நிதியை வழங்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இந்தியப் பிரதமர் மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000-மும் பிரதமர் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Nine migrant workers from North India tragically died in an accident at the Ennore Thermal Power Station in Chennai when a large scaffolding structure collapsed during the construction of new units. Following the incident, Tamil Nadu Chief Minister M.K. Stalin announced a compensation of Rs. 10 lakh for the families of the deceased, while Indian Prime Minister Narendra Modi also expressed condolences and announced a compensation of Rs. 2 lakh for the deceased and Rs. 50,000 for the injured from the Prime Minister’s National Relief Fund.