Wednesday, February 5, 2025

எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுவிடக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய ஆபத்து எழுந்துள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட எரிபொருள் கப்பல் ஒன்று, எரிபொருட்களை இறக்காமல் திரும்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக 70 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அரசாங்கம் உடனடியாக எரிபொருள் விநியோகம் செய்ய தலையீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்படாவிட்டால், நாட்டில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு உருவாகும் அபாயம் இருப்பதாக சங்கத்தின் செயலாளர் கபில நாபுடுன்ன தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கம், அவுஸ்திரேலிய நிறுவனமொன்றுக்கு 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களை வழங்குவதாக உறுதியளித்திருந்த போதிலும், 70 நிலையங்களுக்கே வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனைச் சுற்றியுள்ள முரண்பாடுகளின் காரணமாக கப்பல் திரும்பியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அவுஸ்திரேலிய நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அதிக வருமானம் ஈட்டும் நிலையங்கள் எனவும், ஒப்பந்த சிக்கல்களால் கப்பல் திரும்பியதால், சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்புள்ளதெனவும் கபில நாபுடுன்ன கூறியுள்ளார்.

சவூதி அரேபியா மற்றும் குவைட் போன்ற நாடுகளில் இருந்து இரண்டு மாத கடன் அடிப்படையில் எரிபொருள் பெற வாய்ப்பு இருந்த போதிலும், அதனை பயன்படுத்த தவறியதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உரிய ஒப்பந்தமின்றி எரிபொருள் வாங்க வேண்டாம் என சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Hot this week

பாடசாலை ஆரம்பிப்பு குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட பாடசாலை ஆரம்பிப்பை...

யாழில் பட்டதாரிகள் அனுர அரசுக்கு எச்சரிக்கை!

அதிகக் கல்வித் தகுதி பெற்ற உள்வாரி பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை...

ரணிலால் புதிய அரசாங்கத்திற்கு காத்திருக்கும் சவால்: முன்னாள் எம்.பி எச்சரிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்திற்கு சவால் விடும்...

வடக்கில் படையெடுக்க ஆரம்பித்துள்ள ஆப்பிரிக்க நத்தைகள்; பேராபத்துக்களை சந்திக்கவிருக்கும் இலங்கை

ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்ட பெரும் நத்தைகள், சமீபத்தில் பெய்த பெருமழையின் பின்னர்...

ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்: மீறினால் உரிய நடவடிக்கை

மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புகளை நடத்தும் வாய்ப்பைத் தவிர்க்கும் வகையில், ஆசிரியர்களுக்கு புதிய...

Topics

பாடசாலை ஆரம்பிப்பு குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட பாடசாலை ஆரம்பிப்பை...

யாழில் பட்டதாரிகள் அனுர அரசுக்கு எச்சரிக்கை!

அதிகக் கல்வித் தகுதி பெற்ற உள்வாரி பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை...

ரணிலால் புதிய அரசாங்கத்திற்கு காத்திருக்கும் சவால்: முன்னாள் எம்.பி எச்சரிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்திற்கு சவால் விடும்...

வடக்கில் படையெடுக்க ஆரம்பித்துள்ள ஆப்பிரிக்க நத்தைகள்; பேராபத்துக்களை சந்திக்கவிருக்கும் இலங்கை

ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்ட பெரும் நத்தைகள், சமீபத்தில் பெய்த பெருமழையின் பின்னர்...

ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்: மீறினால் உரிய நடவடிக்கை

மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புகளை நடத்தும் வாய்ப்பைத் தவிர்க்கும் வகையில், ஆசிரியர்களுக்கு புதிய...

“சேர்” என அழைக்க வற்புறுத்திய வைத்தியர் அர்ச்சுனா! மனம் திறக்கும் வைத்தியர் சத்தியமூர்த்தி

யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து, தமது கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன்,...

கொழும்பில் பாலத்திற்கடியில் பச்சிளம் குழந்தை புறக்கணிப்பு: இரக்கமற்ற செயல்

தெமட்டகொட மேம்பாலத்தின் கீழ், ஓரிரு நாட்களான குழந்தையொன்று கைவிடப்பட்ட நிலையில், தகவல்...

கொழும்பு-யாழ்ப்பாணம் இடையேயான போக்குவரத்து சேவையில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு

கொழும்பு-யாழ்ப்பாணம் இடையேயான சில தனியார் பேருந்துகள் பயணிகளிடம் தொடர்ச்சியாக மோசடியில் ஈடுபடுவதாக...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img